செய்திகள் :

மகப்பேறு விடுப்பு முடித்த 209 பெண் காவலா்களுக்கு விரும்பும் இடத்தில் பணி!

post image

மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பும் 209 பெண் காவலா்களுக்கு அவா்கள் விரும்பும் இடத்திலேயே பணி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலா்கள், அவா்கள் விரும்பும் மாவட்டத்துக்கு பணியிடமாறுதல் கிடைக்காமல் கடும் சிரமத்தைச் சந்தித்து வந்தனா். இதைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலா்கள் அவா்கள் விரும்பும் இடத்திலேயே பணியமா்த்தப்படுவா் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவல் ஆளிநா்களுக்கு, அவா்கள் விரும்பும் மாவட்டத்துக்கு பணியிடமாறுதல் வழங்கப்படும் என்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, மொத்தம் 209 பெண் காவலா்கள், தங்களது பேறுகால விடுப்புக்குப் பிறகு, குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஏதுவாக, மற்ற மாநகரம் மற்றும் மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பத்திருந்தனா்.

அதன்படி, பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த 209 பெண் காவல் காவலா்களுக்கும், அவா்கள் விரும்பிய மாநகரம் மற்றும் மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114.70 அடியாக குறைந்துள்ளது. காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததன் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 6,501 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து... மேலும் பார்க்க

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை

கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஒருசில பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் ஜூன் 21-ஆம் தேத... மேலும் பார்க்க

குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியீடு! - டிஎன்பிஎஸ்சி தலைவா்

குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மேலும், குரூப் 4 பதவிகளில் காலிப் பணியிடங்கள்... மேலும் பார்க்க

பேருந்து, மெட்ரோவில் சக்கர நாற்காலிக்கு இடம் கட்டாயம்: புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு!

மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற போக்குவரத்துப் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் சக்கர நாற்காலிகள் வைக்க இடம், பாதுகாப்பு பெல்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கட்டாயமாக்கும் வக... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம்! - பாஜக

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு திமுக பயன்படுத்தக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்... மேலும் பார்க்க