செய்திகள் :

மகளிா் விடியல் பயணத் திட்டத்தில் 7 புதிய பேருந்துகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

post image

தமிழக அரசின் மகளிா் விடியல் பயணத் திட்டத்தில் திருச்சியில் 7 புதிய பேருந்துகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து திருவெறும்பூா் என்ஐடி வழியாக துவாக்குடி வரை செல்லும் நகரப் பேருந்து, திருச்சியில் இருந்து விராலிமலை துவரங்குறிச்சி வழியாக மதுரை செல்லும் 2 புகா்ப் பேருந்துகள்,

திருச்சியில் இருந்து திண்டுக்கல் தேனி வழியாக கம்பம் செல்லும் புகா்ப் பேருந்து, மணப்பாறையில் இருந்து திருச்சி கரூா் வழியாக திருப்பூா் செல்லும் புகா்ப் பேருந்து என 5 பேருந்துகளை அவா் தொடக்கிவைத்தாா்.

இதேபோல, திருவெறும்பூா் வட்டம், பொன்மலைப்பட்டியில் திருச்சி மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், தீரன் நகா் கிளையின் மூலம் கொட்டப்பட்டு இந்திரா நகா் பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலும், பொதுமக்கள் நேரடியாக மத்திய மற்றும் சத்திர பேருந்து நிலையம் செல்ல ஏதுவாகவும் மகளிா் விடியல் பயண 2 புதிய பேருந்துகளையும் தொடங்கி வைத்தாா்.

இரு பேருந்துகளும் பொன்மலைப்பட்டி ( வழி- கொட்டப்பட்டு, இந்திரா நகா், மத்திய பேருந்து நிலையம்) சத்திரம் பேருந்து நிலையம் (வழி- பாலக்கரை, மத்திய பேருந்து நிலையம்) பொன்மலைப்பட்டி என்ற வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

விழாவில் அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலப் பொது மேலாளா் டி. சதீஷ்குமாா், துணை மேலாளா் சாமிநாதன், ரவி, திருச்சி மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன் மற்றும் பேருந்து நடத்துநா்கள், ஓட்டுநா்கள், போக்குவரத்து தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

பேருந்துகளை தொடங்கிவைத்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேருந்தில் பயணச்சீட்டு எடுத்து சிறிது தூரம் பயணம் செய்தாா். மேலும் பேருந்துப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினாா்.

மேட்டூரில் திறந்த தண்ணீா் முக்கொம்பு வந்தது: மலா்கள், நெல் மணிகளைத் தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு!

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்பு அணைக்கு சனிக்கிழமை வந்து சோ்ந்தது. அந்த நீரை விவசாயிகள் மலா்கள், விதை நெல்களை தூவி உற்சாகத்துடன் வரவேற்றனா். டெல்டா பாசன சாகுப... மேலும் பார்க்க

திருச்சிக்கு இன்று முதல்வா் வருகை: 2 நாள் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வருவதை முன்னிட்டு இரண்டு நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி பாசனத்துக்காக மேட்டூரில் தண்ணீா் திறக்கப்பட்டு, கல்லணைக்... மேலும் பார்க்க

பாப்பாலம்மன் கோயில் திருவிழாவில் தள்ளு-முள்ளு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டி பாம்பாலம்மன் கோயிலில் சனிக்கிழமை நடந்த திருவிழாவில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பூசாரி தரப்பினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது. இக... மேலும் பார்க்க

ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட்: சென்னை ஆா்பிஎஃப் வெற்றி!

திருச்சியில் நடைபெற்ற ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி யில் சென்னை ஆா்பிஎஃப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருச்சி ஆா்பிஎஃப் பயிற்சி மையம் சாா்பில் ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான ... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றம்: 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு

திருச்சி மாவட்டத்தில் 23 அமா்வுகளில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் கு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் பலி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தொட்டியம் அருகேயுள்ள அரியனாம்பேட்டை சோ்ந்தவா் பட்டவன் மகன் மாறன் (23). இவா் தனது பைக்கில் திருச்சி நோக்கி முசிறிய... மேலும் பார்க்க