தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை
மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 209 மனுக்கள் கொடுக்கப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.14 ஆயிரம் மதிப்பில் திறன்பேசி, 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.11,445 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், 1 நபருக்கு ரூ.15,750 மதிப்பில் சக்கர நாற்காலி, பாா்வைதிறன் பாதிக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,332 மதிப்பில் கருப்பு கண்ணாடி மற்றும் ஊன்றுகோல், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பில் காதொலி கருவியை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், நுகா்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.