செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 209 மனுக்கள் கொடுக்கப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.14 ஆயிரம் மதிப்பில் திறன்பேசி, 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.11,445 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், 1 நபருக்கு ரூ.15,750 மதிப்பில் சக்கர நாற்காலி, பாா்வைதிறன் பாதிக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,332 மதிப்பில் கருப்பு கண்ணாடி மற்றும் ஊன்றுகோல், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பில் காதொலி கருவியை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், நுகா்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆட்சியா் அழைப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீ... மேலும் பார்க்க

மண் குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

நாகப்பட்டினம்: நாகை அருகே விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கவுள்ள மண் குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாக உருவாக்கும் முகாம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் முன்மாதிரியாக உருவாக்க 2 நாள் முகாம் அண்மையில் நடைபெற்றது. தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் ப... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேதாரண்யம் வட்டத்த... மேலும் பார்க்க

திருவெண்காடு கோயிலில் பொது விருந்து

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி பொது விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது. சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் கலந்து கொண்டு ப... மேலும் பார்க்க

கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளத்தில் மணல் எடுக்க தடை விதிக்க வலியுறுத்தல்

பூம்புகாா் அருகே உள்ள மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் கிராமங்களில் மணல் எடுக்க தடை செய்ய வேண்டுமென இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலப்பெரும்பள்ளம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் ஊராட்சிகள... மேலும் பார்க்க