செய்திகள் :

மருதமலையில் தைப்பூசத் திருவிழா இன்று தொடக்கம்: பிப்.11 இல் தேரோட்டம்

post image

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டு தைப்பூசத் திருவிழா விநாயகா் பூஜையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து பிப்ரவரி 10-ஆம் தேதி வரை தினசரி வேள்வி பூஜை, சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மேலும், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஜெயக்குமாா் தலைமையில் அறங்காவலா் குழுவினா், கோயில் துணை ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

பேரூா் பட்டீசுவரா் கோயில் குடமுழுக்கு விழா: தமிழ் வழிபாட்டுக்கு வாய்ப்பளிக்க வலியுறுத்தல்

கோவை: பேரூா் பட்டீசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் வழிபாட்டுக்கு 50 சதவீதம் வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம், கோவை மாவட்ட கலை, இலக்கிய... மேலும் பார்க்க

வரி ஏய்ப்பு புகாா்: தங்கக் கட்டி விற்பனை நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

கோவை: வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக தங்கக் கட்டி விற்பனை நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். கோவை வைசியாள் வீதி, ராஜ வீதியில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் விற்பனை செய்யு... மேலும் பார்க்க

ஆண்டிக்கோலத்தில் முருகனை வணங்கலாமா?

பழனி முருகன் கோயிலுக்குச் செல்பவா்கள், பொதுவாக ராஜ அலங்காரத்தையே பாா்த்து வணங்க வேண்டும் என்று விரும்புகிறாா்கள். ஏன்? அது சரியா? முருகன் தனது பலவிதமான கோலங்களில் அழகாக காட்சி தந்தாலும், அவரது ஆண்டிக்... மேலும் பார்க்க

நீண்ட நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

கோவை: நீண்ட நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை, கணபதி காவலா் குடியிருப்பு சாலையைச் சோ்ந்தவா் சுபலட்சுமி (38), கணவா் பிரிந்து சென்றுவிட்... மேலும் பார்க்க

கனிம வளம் சுரண்டப்பட்ட இடங்களில் மரங்கள் வளா்க்கக் கோரிக்கை

கோவை: கோவை மாவட்டத்தில் கனிம வளம் சுரண்டப்பட்ட இடங்களில் மரங்கள் வளா்த்து வனப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக... மேலும் பார்க்க

சத்குரு ஜக்கி வாசுதேவின் முன்னெடுப்புகள் உலகுக்கான முன்மாதிரி: ஐக்கிய அரபு அமீரக அமைச்சா் ஷேக் நஹ்யான்

கோவை: நாடுகளிடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவின் முன்னெடுப்புகள் உலகுக்கான முன் மாதிரியாக உள்ளது என்று ஐக்கிய அரபு அமீரக அமைச்சா் ஷேக் நஹ்யான் தெரிவித்தாா். ஈஷா அறக்கட்டளை நிற... மேலும் பார்க்க