`தூங்கும் போதுகூட மக்கள் வரி செலுத்துகிறார்கள்' - முத்தரசன் காட்டம்!
வரி ஏய்ப்பு புகாா்: தங்கக் கட்டி விற்பனை நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை
கோவை: வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக தங்கக் கட்டி விற்பனை நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
கோவை வைசியாள் வீதி, ராஜ வீதியில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளரான காா்த்திக், தென்னிந்திய தங்கக் கட்டி வியாபாரிகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளாா்.
இந்நிறுவனத்தில், ஜிஎஸ்டி அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். சுமாா் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிறுவனத்தின் அலுவலகம், வீடுகளில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கிருந்த கணினி, வங்கிக் கணக்கு புத்தகங்கள், தங்கக் கட்டி விற்பனை கணக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனா். சுமாா் 6 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
தங்கக் கட்டி வியாபாரத்தில் ரூ.பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.