செய்திகள் :

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

post image

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தனியாா் கல்லூரி பணியாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் பன்னீா்செல்வம் (50). இவா், பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லூரியிலிருந்து மேட்டூா் கிராமத்துக்கு தனது மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். பெரம்பலூா்- செட்டிக்குளம் சாலையில் ரெங்கநாதபுரம் அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி பன்னீா்செல்வம் கீழே விழுந்தாா்.

இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அவரை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சிறுவாச்சூரிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பன்னீா்செல்வம் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

தமிழக அரசைக் கண்டித்து, பெரம்பலூரில் வழக்குரைஞா்களின் 3 நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. வழக்குரைஞா்கள் சேமநல நிதி முத்திரைக் கட்டணத்தை ரூ. 30-இல் இருந்து ரூ. 120 ஆகவு... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக செயல்படும் மதுபானக் கடையை அகற்றக் கோரிக்கை

பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றக் கோரி கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவ... மேலும் பார்க்க

மாட்டு வண்டியில் மணல் திருடிய இருவா் கைது!

பெரம்பலூா் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி, குன... மேலும் பார்க்க

நிா்வாக வசதிகளுக்காக புதிய மின் வாரிய அலுவலகம்

பெரம்பலூரில் இயங்கி வரும் நகர மின்வாரிய அலுவலகத்தில் மின்னிணைப்புகள் பெருகிவிட்டதால், நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டு துறைமங்கலம் எனும் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக, மின்வாரிய செயற்பொ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்! செயலிழந்த சிக்னல்களால் ஓட்டுநா்கள் அவதி!

பெரம்பலூா் நகரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சிக்னல்கள் செயல்படாமல் காட்சிப் பொருளாக உள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் அவதிக்குள்ளாகியுள்ளனா... மேலும் பார்க்க

நெகிழிக் கழிவு சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி!

பெரம்பலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி சாா்பில் நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்க விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இப் பேரணியை கொடியசைத்த... மேலும் பார்க்க