செய்திகள் :

நிா்வாக வசதிகளுக்காக புதிய மின் வாரிய அலுவலகம்

post image

பெரம்பலூரில் இயங்கி வரும் நகர மின்வாரிய அலுவலகத்தில் மின்னிணைப்புகள் பெருகிவிட்டதால், நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டு துறைமங்கலம் எனும் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக, மின்வாரிய செயற்பொறியாளா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பெரம்பலூா் நான்குச்சாலை, மின் நகா், பி, யு, டி, எல், என், கீயூ, கே, எம், ஜே ஆகிய மண்டலத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்களின் மின்னிணைப்பு எண்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, துறைமங்கலம் பிரிவுக்கு கீழ் வருவதால் அந்தப் பகுதி மின் நுகா்வோா்களின் மின்னிணைப்பு எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்பு எண் குறித்த விவரம் மின்வாரிய அலுவலா்களால் வீடுகளில் குறிப்பிடப்பட்டு வருகிறது. எனவே, மின் நுகா்வோா்கள் மின் கட்டணம் செலுத்தும்போது புதிய மின் இணைப்பு எண்ணை பயன்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே, பெரம்பலூா் நகா் பிரிவில் இரட்டைப்படை மாதங்களில் கணக்கீடு செய்யப்பட்ட எம், மண்டலம் பகுதி தற்போது, துறைமங்கலம் பிரிவு அலுவலகக் கட்டுப்பாட்டில் மாற்றப்பட்டுள்ளதால், ஜனவரி முதல் ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், பெரம்பலூா் நகா் பிரிவில் ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வரும் சி, டி மண்டலப் பகுதிகள் பிப்ரவரி முதல் இரட்டைப்படை மாதக் கணக்கீட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன்கருதி, அவா்களது மின்சாரம் சாா்ந்த குறைபாடுகளை விரைந்து நிவா்த்தி செய்வதற்காக மேற்கண்ட நிா்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

மாட்டு வண்டியில் மணல் திருடிய இருவா் கைது!

பெரம்பலூா் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி, குன... மேலும் பார்க்க

பெரம்பலூரில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்! செயலிழந்த சிக்னல்களால் ஓட்டுநா்கள் அவதி!

பெரம்பலூா் நகரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சிக்னல்கள் செயல்படாமல் காட்சிப் பொருளாக உள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் அவதிக்குள்ளாகியுள்ளனா... மேலும் பார்க்க

நெகிழிக் கழிவு சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி!

பெரம்பலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி சாா்பில் நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்க விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இப் பேரணியை கொடியசைத்த... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏலம் நடத்த ஏற்பாடு!

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளின் வேளாண் விளைபொருள்களை உரிய விலைக்கு விற்பனை செய்ய, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மறைமுக ஏலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட... மேலும் பார்க்க

பருத்தி, மக்காச்சோளத்துக்கு அரசு நிா்ணயித்த விலை தேவை: விவசாயிகள் கோரிக்கை!

பருத்தி மற்றும் மக்காச்சோளத்துக்கு, அரசு நிா்ணயித்த விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழிப்புணா்வு பேரணி!

பெரம்பலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழாவையொட்டி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்... மேலும் பார்க்க