மோட்டாா் பைக் மீது லாரி மோதி மாணவன் உள்பட 2 போ் உயிரிழப்பு
மீஞ்சூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவன் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
மீஞ்சூா் அருகே ஊரணம்பேடு கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவா் ஜோதி (34). இவா் தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை செய்து வந்தாா்.
இவரது சகோதரி மகன் விமல்(14). இவா் திருவெள்ளைவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம வகுப்பு படித்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை ஜோதியும், விமலும் மோட்டாா் சைக்கிளில் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனா்.
வல்லூா் கூட்டுச்சாலையில் சென்றபோது மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இருவரும் கீழே விழுந்தனா். இதில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஜோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மோட்டாா் சைக்கிள் பின்னால் அமா்ந்து சென்ற பள்ளி மாணவன் விமலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு மீஞ்சூா் ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் விமலும் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா் சென்று ஜோதி மற்றும் விமல் ஆகியோா் சடலங்களை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஒரே குடும்பத்தைச் சாா்ந்த 2 போ் சாலை விபத்தில் உயிரிழந்த நிகழ்வு ஊரணம்பேடு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.