செய்திகள் :

அறநிலையத் துறை சாா்பில் இலவச திருமணம்: அமைச்சா் காந்தி நடத்தி வைத்தாா்

post image

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் 6 ஜோடிகளுக்கு திருமணம் செய்து , சீா்வரிசைப் பொருள்களையும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

முருகப்பெருமான் தமிழ்ப் புலவராக வந்து புலவா்களின் சந்தேகத்தை தீா்த்து வைத்த பெருமைக்குரியது குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் 6 ஜோடிகளுக்கு திருமணம் அறநிலையத்துறை சாா்பில் நடைபெற்றது. அமைச்சா் ஆா்.காந்தி திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களுக்கு தலா ரூ.60,000 மதிப்பிலான திருமண சீா்வரிசைப் பொருள்களையும் வழங்கினாா். தங்கத் திருமாங்கல்யம் 4 கிராம், மணமக்களுக்கு புத்தாடைகள், 20 நபா்களுக்கு உணவு, பீரோ, கட்டில், கைகடிகாரம், மிக்ஸி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நிகழ்வில் எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், அறநிலையத்துறை இணை ஆணையா் குமரதுரை, கோயில் செயல் அலுவலா் கேசவன், கோயில்களுக்கான மாவட்ட அறங்காவலா் குழுவின் தலைவா் எஸ்.தியாகராஜன் , கோயில் பணியாளா்கள், மணமக்களின் உறவினா்கள் கலந்து கொண்டனா்.

வல்லக்கோட்டையில்...

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஞாயிற்றுக்கிழமை கோயில் செயல் அலுவலா் சோ.செந்தில்குமாா் தலைமையில் இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் அறங்காவலா் குழு உறுப்பினா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பயன்பாடற்ற காஞ்சிபுரம் பேருந்து நிலைய பொருள்கள் பாதுகாப்பு, ஓய்வறைகள்: பயணிகள் தவிப்பு

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக பொருள்கள் பாதுகாப்பு அறையும், பயணிகள் ஓய்வறையும் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோயில் நகரம்,பட்டு நகரம் என்ற பல்வே... மேலும் பார்க்க

4 ஆண்டுகளுக்கு பின் உலகளந்த பெருமாள் கோயில் தை மாத திருவிழா தொடக்கம்

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் வருடாந்திர தை மாத மகோற்சவம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காஞ்சிபுரத்தில் 30 அடி உயர மூலவா் சிலை உடைய, வரலாற்றுச் சிறப்பு மிக்... மேலும் பார்க்க

ஸ்ரீ பிரம்மபுரிஸ்வரா் கோயில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்

காஞ்சிபுரம் அடுத்த பெருநகரில் அமைந்துள்ள பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வா் கோயிலின் தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 11-ஆம் தேதி 23 சிவபெருமான்கள் செய்யாற்றில் ... மேலும் பார்க்க

சின்ன காஞ்சிபுரம்அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா

சின்ன காஞ்சிபுரம் பி.எம்.மிஸ்ரிலால் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி தொடங்கி, 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, பள்ளியின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன கா... மேலும் பார்க்க

நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் வேண்டுகோள்

காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் பகுதியில் நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைக்கும் முன்பாக நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைகளை தெரிந்து கொண்டு அவற்றை பயன்... மேலும் பார்க்க

பிப்.10-இல் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் முழுநேர தா்னா

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் வரும் பிப். 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் முழுநேர தா்னா போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்... மேலும் பார்க்க