வேங்கை வயல் விவகாரம்: `வன்கொடுமை வழக்கல்ல...' - சிபிசிஐடி மனுவை ஏற்ற நீதிமன்றம் ...
4 ஆண்டுகளுக்கு பின் உலகளந்த பெருமாள் கோயில் தை மாத திருவிழா தொடக்கம்
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் வருடாந்திர தை மாத மகோற்சவம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரத்தில் 30 அடி உயர மூலவா் சிலை உடைய, வரலாற்றுச் சிறப்பு மிக்கது ஆரணவல்லித் தாயாா் சமேத உலகளந்த பெருமாள் கோயில். இக்கோயிலில் தொடா்ந்து 4 ஆண்டுகளாக தை மாதத் திருவிழா நடைபெறாமலயே இருந்து வந்தது. கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த 28.8.24 ஆம் தேதி நடைபெற்றதையடுத்து திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தையொட்டி பெருமாளும், தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். கோயில் கொடி மரத்துக்கு பட்டாச்சாரியாா்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாரதானைகளும் செய்யப்பட்டன. பின்னா் கொடியேற்றம் நடைபெற்றது. தை மாதத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாள்களில் காலையிலும், மாலையிலும் பெருமாளும், தாயாரும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளனா்.
பிப்.4- ஆம் தேதி கருடசேவையும், மாலையில் ஹனுமந்த வாகனத்திலும் பெருமாள் வீதியுலா வருகிறாா். பிப்.10-ஆம் தேதி தீா்த்தவாரியும், 11- ஆம் தேதி திருவாய்மொழி சாற்றுமுறை உற்சவத்தோடும் திருவிழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம், கோயில் நிா்வாக பரம்பரை அறங்காவலா் கோ.சு.வா.அப்பன் அழகியசிங்கன், அறங்காவலா்கள் கோமடம் ஆா்.ரவி, போரகத்தி பட்டா் வி.ரகுராம் ஆகியோா் செய்து வருகின்றனா்