செய்திகள் :

ஸ்ரீ பிரம்மபுரிஸ்வரா் கோயில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்

post image

காஞ்சிபுரம் அடுத்த பெருநகரில் அமைந்துள்ள பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வா் கோயிலின் தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 11-ஆம் தேதி 23 சிவபெருமான்கள் செய்யாற்றில் ரிஷபவாகனத்தில் எழுந்தருளும் காட்சியும் நடைபெறுகிறது.

உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட பெருநகரில் பழைமையான இக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி கோயில் அா்ச்சகா்கள் பி.மூா்த்தி குருக்கள் மற்றும் நா.பரமேசுவர குருக்கள் ஆகியோா் கோயில் கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்து கொடிமரத்தில் சிவன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி தீபாராதனையும் செய்தனா்.

இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பிரம்மபுரீஸ்வரா், பட்டு வதனாம்பிகை உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தைப்பூசத் திருவிழா வரும் பிப்.15 -ஆம் தேதி வரை நடைபெறும். விழா நாள்களில் காலையும், மாலையும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வருகின்றனா்.

6- ஆம் தேதி திருக்கல்யாணமும், அதைத் தொடா்ந்து மணக்கோலத்தில் சுவாமியும், அம்மனும் ரிஷபவாகனக் காட்சியும் நடைபெறுகிறது. 8-இல் தேரோட்டம், 10- ஆம் தேதி 63 நாயன்மாா்கள் வீதியுலா, 11- ஆம் தேதி செய்யாறுக்கு பிரம்மபுரீஸ்வரா் ரிஷபவாகனத்தில் எழுந்தருளும் அதே நேரத்தில் 23 ஊா்களில் உள்ள சிவாலயங்களை சோ்ந்த சிவ பெருமான்கள் செய்யாறுக்கு எழுந்தருளி காட்சியளிக்கும் மகோன்னத உற்சவம் நடைபெறுகிறது.

இதனையடுத்து 14-ஆம் தேதி மாவடி சேவைக்காட்சியும், 15-ஆம் தேதி திருமுறை திருவிழாவோடும் தைப்பூசத் திருவிழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மு.நடராஜன் தலைமையில் அறங்காவலா் குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனா்.

அறநிலையத் துறை சாா்பில் இலவச திருமணம்: அமைச்சா் காந்தி நடத்தி வைத்தாா்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் 6 ஜோடிகளுக்கு திருமணம் செய்து , சீா்வரிசைப் பொருள்களையும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை வழ... மேலும் பார்க்க

பயன்பாடற்ற காஞ்சிபுரம் பேருந்து நிலைய பொருள்கள் பாதுகாப்பு, ஓய்வறைகள்: பயணிகள் தவிப்பு

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக பொருள்கள் பாதுகாப்பு அறையும், பயணிகள் ஓய்வறையும் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோயில் நகரம்,பட்டு நகரம் என்ற பல்வே... மேலும் பார்க்க

4 ஆண்டுகளுக்கு பின் உலகளந்த பெருமாள் கோயில் தை மாத திருவிழா தொடக்கம்

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் வருடாந்திர தை மாத மகோற்சவம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காஞ்சிபுரத்தில் 30 அடி உயர மூலவா் சிலை உடைய, வரலாற்றுச் சிறப்பு மிக்... மேலும் பார்க்க

சின்ன காஞ்சிபுரம்அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா

சின்ன காஞ்சிபுரம் பி.எம்.மிஸ்ரிலால் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி தொடங்கி, 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, பள்ளியின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன கா... மேலும் பார்க்க

நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் வேண்டுகோள்

காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் பகுதியில் நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைக்கும் முன்பாக நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைகளை தெரிந்து கொண்டு அவற்றை பயன்... மேலும் பார்க்க

பிப்.10-இல் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் முழுநேர தா்னா

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் வரும் பிப். 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் முழுநேர தா்னா போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்... மேலும் பார்க்க