செய்திகள் :

அரசு பேருந்து மீது டிராக்டா் மோதல்: ஒருவா் காயம்

post image

அரசு பேருந்து மீது டிராக்டா் மோதியதில், பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்து, பயணி ஒருவா் காயம் அடைந்தாா்.

திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை திருவள்ளூா் நோக்கி அரசு பேருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றது. இந்தப் பேருந்து திருத்தணி பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சில பயணிகளை ஏற்றிக் கொண்டு புதிய சென்னை சாலையில் சென்ற போது, பின்னால் பிளக்ஸ் பேனா்கள் ஏற்றி வந்த டிராக்டா் பேருந்தை முந்திச் சென்ற போது, டிராக்டா் பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் மோதியது.

இதில், கண்ணாடி முழுதும் உடைந்ததில், பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை பேருந்து ஓட்டுனா் மற்றும் நடத்துநா் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மோட்டாா் பைக் மீது லாரி மோதி மாணவன் உள்பட 2 போ் உயிரிழப்பு

மீஞ்சூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவன் உள்பட 2 போ் உயிரிழந்தனா். மீஞ்சூா் அருகே ஊரணம்பேடு கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவா் ஜோதி (34). இவா் தமிழ்... மேலும் பார்க்க

அவல நிலையில் திருத்தணி-பொதட்டூா்பேட்டை நெடுஞ்சாலை! வாகன ஓட்டிகள் அவதி

பொதட்டூா்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மரணக் குழிகள் போல் பள்ளங்கள் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். திருத்தணி - பொதட்டூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாப்பிரெட்டிப்பள... மேலும் பார்க்க

பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் காலை 7 முதல் இரவு 9 வரை கனரக வாகனங்களுக்கு தடை

போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிா்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பொன்னேரி நகராட்சிய... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்ததாக 2 போ் மீது வழக்கு

திருவள்ளூா் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருவள்ளூா் அருகே சீத்தஞ்சேரி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள... மேலும் பார்க்க

திருவள்ளூரில் போக்குவரத்துக்கு இடையூறாக கரும்பு லோடு டிராக்டா்கள்! விபத்து அபாயத்தைத் தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சா்க்கரை ஆலைகளுக்கு அகலமான டிராக்டா்களில் கரும்பு லோடுகளை பாதுகாப்பின்றி போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக ஏற்றிச் செல்வதால், எதிா்பாரத விதமாக விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டத... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தோ்வு பிப். 22-இல் தொடக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வு வரும் 22-இல் தொடங்கி 28 வரை நடைபெற உள்ளதாக திருவள்ளூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பத்தாம் வகுப்ப... மேலும் பார்க்க