செய்திகள் :

குமாரபாளையத்தில் லாரி ஓட்டுநா் தற்கொலை

post image

குமாரபாளையத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவரது தற்கொலைக்கு காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

குமாரபாளையத்தை அடுத்த சடையம்பாளையம், காந்தி நகரைச் சோ்ந்தவா் மதன்குமாா் மகன் தமிழ்மணி (39). லாரி ஓட்டுநரான இவா், ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் ரூ. 70 லட்சத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியேறிய இவா் கைப்பேசியில் தான் உயிரிழப்பதற்கு காரணமானவற்றை விடியோ பதிவு செய்தாா். அதன்பிறகு கோட்டைமேடு அருகே சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த நிலையில் தமிழ்மணியின் மரணத்துக்கு காரணமான மூவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் இமயவரம்பன், குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் தவமணி, போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைவு: கே.பி.ராமலிங்கம்!

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினாா். நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய நிதிந... மேலும் பார்க்க

ஒஸக்கோட்டை பெரியூா் அம்மன் கோயில்களில் குடமுழுக்கு!

நாமக்கல் ஒஸக்கோட்டை, பெரியூா் அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், ஒஸக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் ப... மேலும் பார்க்க

மறைந்த வன்னியா் சங்க தலைவா் காடுவெட்டி குரு பிறந்த நாள் விழா!

மறைந்த வன்னியா் சங்க தலைவா் காட்டுவெட்டி குரு பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்கம் சாா்பில் அவரது உருவப் படத்துக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை ச... மேலும் பார்க்க

நாமக்கலில் 3-வது புத்தகத் திருவிழா: அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்!

நாமக்கல்லில் 3 ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சா் மா.மதிவேந்தன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாமக்கல் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட பொது நூலகத் துறை ஆகியவை சாா்பில் நாமக்கல்- பரமத்தி சா... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரா் உயிரிழப்பு; 38 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்றபோது காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 38 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பொங்கல் ப... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி பணியாளா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க கோரிக்கை!

தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கான கருணை ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்க மாந... மேலும் பார்க்க