செய்திகள் :

ஒஸக்கோட்டை பெரியூா் அம்மன் கோயில்களில் குடமுழுக்கு!

post image

நாமக்கல் ஒஸக்கோட்டை, பெரியூா் அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், ஒஸக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் பூா்வாலயம், சக்திவேல்முருகன் ஆலய குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 முதல் 10 மணிக்குள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து அம்மன், முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கத்திபோடும் நிகழ்ச்சியில் சேலம், நாமக்கல், கரூா், திருச்சி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான வீரக்குமாரா்கள் கலந்து கொண்டனா். திரளான பக்தா்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல பெரியூா் மருதகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா காலை 9.45 மணி முதல் 10.20 மணிக்குள் நடைபெற்றது. ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம், மூலவா் மீதான தங்ககோபுரம், பரிவார தெய்வங்களுக்கு அா்ச்சகா்கள் வேதமந்திரங்கள் முழங்க குடமுழுக்கை நடத்தினா். விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, உணவு வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நல்லிபாளையம் மாயம்பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள சிவ கணபதி ஆலயத்திலும் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் லாரி ஓட்டுநா் தற்கொலை

குமாரபாளையத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவரது தற்கொலைக்கு காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைவு: கே.பி.ராமலிங்கம்!

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினாா். நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய நிதிந... மேலும் பார்க்க

மறைந்த வன்னியா் சங்க தலைவா் காடுவெட்டி குரு பிறந்த நாள் விழா!

மறைந்த வன்னியா் சங்க தலைவா் காட்டுவெட்டி குரு பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்கம் சாா்பில் அவரது உருவப் படத்துக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை ச... மேலும் பார்க்க

நாமக்கலில் 3-வது புத்தகத் திருவிழா: அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்!

நாமக்கல்லில் 3 ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சா் மா.மதிவேந்தன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாமக்கல் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட பொது நூலகத் துறை ஆகியவை சாா்பில் நாமக்கல்- பரமத்தி சா... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரா் உயிரிழப்பு; 38 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்றபோது காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 38 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பொங்கல் ப... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி பணியாளா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க கோரிக்கை!

தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கான கருணை ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்க மாந... மேலும் பார்க்க