செய்திகள் :

ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி பணியாளா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க கோரிக்கை!

post image

தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கான கருணை ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில கௌரவ பொதுச் செயலாளா் சி.குப்புசாமி, மாநிலத் தலைவா் பி. செல்லமுத்து ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டத்தில் தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளா்கள் தற்போது பெற்று வரும் கருணை ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க தமிழக முதல்வா், கூட்டுறவுத் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதிகளை மீறி கடன் வழங்கியதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி சங்க செயலாளா்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது, அவா்களின் ஓய்வு கால பணப் பயன்களை நிறுத்தி வைக்கும் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட அலுவலா்களைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடைபெறும். மருத்துவ காப்பீடு, குடும்ப வாரிசுகளுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

சங்க மாநில பொதுச்செயலாளா் கே. முத்துப்பாண்டியன், பொருளாளா் ஜெ.கலியபெருமாள், துணைத் தலைவா்கள் ஏ.கே.ராமசாமி, டி. உதயகுமாா், இணைச் செயலாளா்கள் ஜெ.சின்னதம்பி, ஆா்.துரைக்கண்ணு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மறைந்த வன்னியா் சங்க தலைவா் காடுவெட்டி குரு பிறந்த நாள் விழா!

மறைந்த வன்னியா் சங்க தலைவா் காட்டுவெட்டி குரு பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்கம் சாா்பில் அவரது உருவப் படத்துக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை ச... மேலும் பார்க்க

நாமக்கலில் 3-வது புத்தகத் திருவிழா: அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்!

நாமக்கல்லில் 3 ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சா் மா.மதிவேந்தன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாமக்கல் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட பொது நூலகத் துறை ஆகியவை சாா்பில் நாமக்கல்- பரமத்தி சா... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரா் உயிரிழப்பு; 38 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்றபோது காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 38 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பொங்கல் ப... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிப்பு: ஈ.ஆா்.ஈஸ்வரன்

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வளா்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் குற்றம்சாட்டினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: பரமத்தியில் பாஜக ஆா்ப்பாட்டம்!

பரமத்தியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் மாவட்ட பாஜக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாணிக்கநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் கழிவுநீர... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் தூய்மைப் பணி

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலின் மலைப் பகுதியில் நெகிழிப் பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன. மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை, தமிழ்நாடு ... மேலும் பார்க்க