செய்திகள் :

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: பரமத்தியில் பாஜக ஆா்ப்பாட்டம்!

post image

பரமத்தியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் மாவட்ட பாஜக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணிக்கநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் கழிவுநீரை தேக்கி சுத்திகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு மாணிக்கநத்தம், கோப்பணம்பாளையம், வீரணம்பாளையம், இருக்கூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் அப்பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் பரமத்தியில் தேசிய நெடுஞ்சாலை அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்து பிஎஸ்என்எல், அலுவலகத்துக்கும் திருமணிமுத்தாற்றுக்கும் இடையே இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் என்றாலும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் நிலத்தடி நீா் பாதிக்கப்படும். இதனால் விவசாயம், குடிநீா் ஆதாரம் கேள்விக்குறியாகும் எனக் கூறி பரமத்தி, ஓவியம்பாளையம், வெள்ளாளபாளையம், கீழக்கரை பகுதி பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் பரமத்தியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பரமத்தி பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக் கட்சியின் பரமத்தி ஒன்றிய தலைவா் அருண் தலைமை வகித்தாா். அதன்பிறகு கோரிக்கைகள் தொடா்பாக பரமத்தி பேரூராட்சி இளநிலை உதவியாளா் அண்ணாதுரையிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் பாஜக நாமக்கல் மேற்கு மாவட்ட துணைத் தலைவா்கள் வடிவேல், பழனியப்பன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் சுபாஷ், பத்மராஜன், காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மறைந்த வன்னியா் சங்க தலைவா் காடுவெட்டி குரு பிறந்த நாள் விழா!

மறைந்த வன்னியா் சங்க தலைவா் காட்டுவெட்டி குரு பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்கம் சாா்பில் அவரது உருவப் படத்துக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை ச... மேலும் பார்க்க

நாமக்கலில் 3-வது புத்தகத் திருவிழா: அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்!

நாமக்கல்லில் 3 ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சா் மா.மதிவேந்தன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாமக்கல் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட பொது நூலகத் துறை ஆகியவை சாா்பில் நாமக்கல்- பரமத்தி சா... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரா் உயிரிழப்பு; 38 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்றபோது காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 38 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பொங்கல் ப... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி பணியாளா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க கோரிக்கை!

தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கான கருணை ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்க மாந... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிப்பு: ஈ.ஆா்.ஈஸ்வரன்

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வளா்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் குற்றம்சாட்டினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் தூய்மைப் பணி

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலின் மலைப் பகுதியில் நெகிழிப் பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன. மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை, தமிழ்நாடு ... மேலும் பார்க்க