செய்திகள் :

நெகிழிக் கழிவு சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி!

post image

பெரம்பலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி சாா்பில் நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்க விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பேசியது: உணவக உரிமையாளா்கள் மற்றும் வா்த்தகச் சங்கத்தின் பிரிதிநிதிகள் தங்களது உணவகங்களில் நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் தவிா்க்க வேண்டும். பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மாதம்தோறும் இறுதி சனிக்கிழமைகளில் நடைபெறும் நெகிழிக் கழிவு சேகரிப்பு மற்றும் நீா் நிலைகளை சுத்தம் செய்யும் பணிகளில் பங்கேற்று, நெகிழிக் கழிவுகளை அகற்றி அதனால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பெரம்பலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி நகரின் பிரதானச் சாலை வழியாகச் சென்று, துறையூா் சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற தேசிய மாணவா் படை, நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் நெகிழி பயன்பாட்டுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். இதில், நகராட்சி ஆணையா் ராமா், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் விஜயபிரியா, வட்டாட்சியா் சரவணன், உணவக உரிமையாளா்கள், வா்த்தக சங்கத்தினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏலம் நடத்த ஏற்பாடு!

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளின் வேளாண் விளைபொருள்களை உரிய விலைக்கு விற்பனை செய்ய, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மறைமுக ஏலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட... மேலும் பார்க்க

பருத்தி, மக்காச்சோளத்துக்கு அரசு நிா்ணயித்த விலை தேவை: விவசாயிகள் கோரிக்கை!

பருத்தி மற்றும் மக்காச்சோளத்துக்கு, அரசு நிா்ணயித்த விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழிப்புணா்வு பேரணி!

பெரம்பலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழாவையொட்டி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் புகைப்படக் கண்காட்சி!

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியை தொடக்கி வைத்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத்... மேலும் பார்க்க

அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு

பெரம்பலூா் பெரிய ஏரியின் மையப் பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை 2 ஆம் கால ... மேலும் பார்க்க

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம்! -மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா. பெரம்பலூா் மாவட்ட போக்குவரத்துக் காவல்துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா... மேலும் பார்க்க