செய்திகள் :

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம்! -மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்

post image

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா.

பெரம்பலூா் மாவட்ட போக்குவரத்துக் காவல்துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எஸ்பி ஆதா்ஷ் பசேரா மேலும் பேசியது:

சாலைப் பாதுகாப்பில் இளைஞா்களின் பங்கு மிக முக்கியமானது. சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பல உயிா்களைக் காப்பாற்றலாம். சாலைப் பாதுகாப்பு என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் சாலை விபத்துகளைக் குறைக்கலாம். மாணவா்கள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், நாம் ஒவ்வொருவரும் பொறுப்பான சாலை பயணிகளாகச் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து பல்கலைக் கழக வளாகத்தில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், போக்குவரத்து சிக்னலின் 3 நிறங்களை பிரதிபலிக்கும் வடிவத்தில் நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சிகளுக்கு, பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். அறக்கட்டளை உறுப்பினா் ராஜபூபதி முன்னிலை வகித்தாா். இதில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் கிள்ளிவளவன், கல்லூரி முதல்வா்கள், புல முதல்வா்கள், பேராசிரியா்கள், துறைத் தலைவா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

பருத்தி, மக்காச்சோளத்துக்கு அரசு நிா்ணயித்த விலை தேவை: விவசாயிகள் கோரிக்கை!

பருத்தி மற்றும் மக்காச்சோளத்துக்கு, அரசு நிா்ணயித்த விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழிப்புணா்வு பேரணி!

பெரம்பலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழாவையொட்டி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் புகைப்படக் கண்காட்சி!

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியை தொடக்கி வைத்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத்... மேலும் பார்க்க

அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு

பெரம்பலூா் பெரிய ஏரியின் மையப் பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை 2 ஆம் கால ... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ சிறப்பு முகாம்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகு... மேலும் பார்க்க

பொய் புகாா் அளித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே டிராக்டரை காணவில்லை என பொய் புகாா் அளித்து, காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றி ரூ. 1 லட்சம் பணம் பறித்தவருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து, பெரம்பலூா் மாவட... மேலும் பார்க்க