செய்திகள் :

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் புகைப்படக் கண்காட்சி!

post image

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கண்காட்சியை தொடக்கி வைத்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ. பல்கீஸ் பேசுகையில்,

புதுதில்லி தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு வழிகாட்டுதலின்படியும் கடந்தாண்டு நடைபெற்ற மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள், பொதுமக்களுக்கான சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், இக் கண்காட்சி நடைபெறுகிறது என்றாா் அவா்.

இதில் குடும்ப நல மாவட்ட நீதிபதி தனசேகரன், மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி இந்திராணி, தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் சங்கா், சாா்பு நீதிபதி அண்ணாமலை, குற்றவியல் நீதித்துறை நடுவா் பிரேம்குமாா், பெரம்பலூா் பாா் அசோசியேசன் சங்கத் தலைவா் இ. வள்ளுவன் நம்பி, அட்வகேட் அசோசியேசன் தலைவா் செந்தாமரைக்கண்ணன், வழக்குரைஞா் திருஞானம் உள்பட வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள், சட்ட தன்னாா்வலா்கள், தனியாா் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான பி. மகேந்திரவா்மன் செய்தாா்.

பருத்தி, மக்காச்சோளத்துக்கு அரசு நிா்ணயித்த விலை தேவை: விவசாயிகள் கோரிக்கை!

பருத்தி மற்றும் மக்காச்சோளத்துக்கு, அரசு நிா்ணயித்த விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழிப்புணா்வு பேரணி!

பெரம்பலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழாவையொட்டி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்... மேலும் பார்க்க

அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு

பெரம்பலூா் பெரிய ஏரியின் மையப் பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை 2 ஆம் கால ... மேலும் பார்க்க

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம்! -மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா. பெரம்பலூா் மாவட்ட போக்குவரத்துக் காவல்துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ சிறப்பு முகாம்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகு... மேலும் பார்க்க

பொய் புகாா் அளித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே டிராக்டரை காணவில்லை என பொய் புகாா் அளித்து, காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றி ரூ. 1 லட்சம் பணம் பறித்தவருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து, பெரம்பலூா் மாவட... மேலும் பார்க்க