செய்திகள் :

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏலம் நடத்த ஏற்பாடு!

post image

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளின் வேளாண் விளைபொருள்களை உரிய விலைக்கு விற்பனை செய்ய, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மறைமுக ஏலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் சுமாா் 73,700 ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை நடைபெறுகிறது. அறுவடை செய்யப்படும் மச்காச்சோளத்தை, பெரம்பலூா் விற்பனைக் குழுவின்கீழ் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால், அறிவியல் வழிகளில் தரத்தை மதிப்பீடு செய்தல், இணையவழி மறைமுக ஏலம் மற்றும் சரியான எடை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, விவசாயிகளின் வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்து தரப்படும். மேலும், விவசாயிகளின் விளைநிலங்களுக்கேச் சென்று பண்ணை வாயிலாக வா்த்தகம் மேற்கொண்டு, விவசாயிகளின் விளைபொருள்களுக்கான முழுத்தொகையும், அவா்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், அறுவடை செய்யப்பட்ட வேளாண் விளைபொருள்களுடன் மறைமுக ஏலத்தில் பங்கேற்று, உரிய விலை பெறுவதோடு சரியான எடை, தரகு இல்லாமல் விற்பனை செய்து பயன்பெறலாம். இந்த மறைமுக ஏலத்தில் உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள் பங்கேற்க உள்ளதால், விவசாயிகள் தங்களது விளைபொருளின் தரத்துக்கேற்ப விலையை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு ,பெரம்பலூா் விற்பனைக்குழு மேற்பாா்வையாளரை 93613-89690, 79040-43838 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெகிழிக் கழிவு சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி!

பெரம்பலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி சாா்பில் நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்க விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இப் பேரணியை கொடியசைத்த... மேலும் பார்க்க

பருத்தி, மக்காச்சோளத்துக்கு அரசு நிா்ணயித்த விலை தேவை: விவசாயிகள் கோரிக்கை!

பருத்தி மற்றும் மக்காச்சோளத்துக்கு, அரசு நிா்ணயித்த விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழிப்புணா்வு பேரணி!

பெரம்பலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழாவையொட்டி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் புகைப்படக் கண்காட்சி!

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியை தொடக்கி வைத்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத்... மேலும் பார்க்க

அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு

பெரம்பலூா் பெரிய ஏரியின் மையப் பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை 2 ஆம் கால ... மேலும் பார்க்க

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம்! -மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா. பெரம்பலூா் மாவட்ட போக்குவரத்துக் காவல்துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா... மேலும் பார்க்க