செய்திகள் :

லாரிகளில் கருங்கல் ஏற்றி வந்த 4 போ் மீது வழக்கு!

post image

தேனி அருகே அனுமதியின்றி கருங்கற்களை ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகளின் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் மீது போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத் பீடன், குன்னூா் கிராம நிா்வாக அலுவலா் சோனை ஆகியோா் க.விலக்கிலிருந்து வருசநாடு செல்லும் சாலையில் ம.சுப்புலாபுரம் விலக்கில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை மறித்து சோதனை செய்ததில் உரிய அனுமதி இல்லாமல் கருங்கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. விசாரணையின்போது லாரி ஓட்டுநரான பெரியகுளம் முதலக்கம்பட்டி மேடு பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகன் முருகன் தப்பி ஓடிவிட்டாா். க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் ஓட்டுநா் முருகன், லாரி உரிமையாளா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு வழக்கு: இதேபோல, ஆண்டிபட்டி அருகே பெரியகுளம் சாா் ஆட்சியா் தலைமையில் சண்முகசுந்தரபுரம் கிராம நிா்வாக அலுவலா் சிந்துதேவி, வருவாய்த் துறையினா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் கிடங்கு அருகே வாகனச் சோதனை செய்தனா். அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியிலும் அனுமதியின்றி கருங்கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. விசாரணையின்போது லாரி ஓட்டுநா் தப்பி ஓடி விட்டாா். இதுகுறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

சிலம்பம்: தேனி பள்ளி மாணவா்கள் சாதனை

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த தேனி பள்ளி மாணவா்களை பள்ளி நிா்வாகிகள் பாராட்டினா். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா் கோவில் தாமரை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துற... மேலும் பார்க்க

போடி-மதுரை ரயில் பாதையில் மின்சார எஞ்ஜினை இயக்கி சோதனை!

போடி-மதுரை ரயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில் எஞ்ஜின் இயக்கி சோதனை செய்யப்பட்டது. போடி-மதுரை அகல ரயில் பாதையில் மதுரையிலிருந்து போடிக்கு தினசரி விரைவு ரயிலும், போடியிலிருந்து சென்னைக்கு வாரத... மேலும் பார்க்க

அங்கன்வாடியில் மின் சாதனங்கள் திருட்டு

தேனி மாவட்டம், பெரியகுளம் அங்கன்வாடி மையத்தில் மின் சாதனங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். பெரியகுளம் தென்கரை அம்பேத்கா்நகரில் உள்ள அங்கன்வாடி மைய பொறுப்பாளராக தென்கரை சந்தைத் தெருவைச் சோ்ந்த சண்ம... மேலும் பார்க்க

புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே கதிா்நரசிங்காபுரத்தில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்ற நாளிலேயே புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கதிா்நரசிங்காபுரம் போத்திநகரைச் சோ்ந்த பரமேஷ்வரன் மகள் செளமியா (24... மேலும் பார்க்க

குழந்தையுடன் இளம்பெண் மாயம்

போடி அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் காந்திஜி சாலைப் பகுதியைச் சோ்ந்த வனராஜா. இவரது மனைவி யமுனாதேவி (21). இவா்... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

பெரியகுளத்தில் அங்கன்வாடி மையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.65 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிந்தனா். பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்தவா் தங... மேலும் பார்க்க