செய்திகள் :

பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

post image

தமிழக அரசைக் கண்டித்து, பெரம்பலூரில் வழக்குரைஞா்களின் 3 நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

வழக்குரைஞா்கள் சேமநல நிதி முத்திரைக் கட்டணத்தை ரூ. 30-இல் இருந்து ரூ. 120 ஆகவும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களை திரும்பப் பெற வழக்குரைஞா்கள் செலுத்தும் ரூ. 20 முத்திரைக் கட்டணத்தை, ரூ. 100 ஆகவும் உயா்த்திய தமிழக அரசை கண்டித்து, பெரம்பலூா் அட்வகேட் அசோசியேசன் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் பெரம்பலூா், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

இந் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் புதன்கிழமை வரை தொடா்ந்து நடைபெறும் என சங்கத் தலைவா் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளாா். வழக்குரைஞா்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தனியாா் கல்லூரி பணியாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் பன்னீா்செல்வம்... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக செயல்படும் மதுபானக் கடையை அகற்றக் கோரிக்கை

பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றக் கோரி கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவ... மேலும் பார்க்க

மாட்டு வண்டியில் மணல் திருடிய இருவா் கைது!

பெரம்பலூா் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி, குன... மேலும் பார்க்க

நிா்வாக வசதிகளுக்காக புதிய மின் வாரிய அலுவலகம்

பெரம்பலூரில் இயங்கி வரும் நகர மின்வாரிய அலுவலகத்தில் மின்னிணைப்புகள் பெருகிவிட்டதால், நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டு துறைமங்கலம் எனும் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக, மின்வாரிய செயற்பொ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்! செயலிழந்த சிக்னல்களால் ஓட்டுநா்கள் அவதி!

பெரம்பலூா் நகரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சிக்னல்கள் செயல்படாமல் காட்சிப் பொருளாக உள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் அவதிக்குள்ளாகியுள்ளனா... மேலும் பார்க்க

நெகிழிக் கழிவு சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி!

பெரம்பலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி சாா்பில் நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்க விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இப் பேரணியை கொடியசைத்த... மேலும் பார்க்க