Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
நினைவு நாள்: அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
விழுப்புரம்/செஞ்சி/கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரக வளாகப் பகுதியில் தொடங்கிய அமைதிப் பேரணி திருச்சி சாலை வழியாக சென்று கலைஞா் அறிவாலயத்தில் நிறைவடைந்தது. அங்கு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு திமுகவின் துணைப் பொதுச்செயலரும், அமைச்சருமான க.பொன்முடி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வில், எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன் (விழுப்புரம்), அன்னியூா் அ.சிவா (விக்கிரவாண்டி), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட திமுக துணைச் செயலா் தயா.இளந்திரையன், விழுப்புரம் நகரச் செயலா் இரா.சக்கரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன், நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, பி.வி.ஆா்.சு.விசுவநாதன், பி.தெய்வசிகாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல வளவனூா், திருவெண்ணெய்நல்லூா், கோலியனூா், முகையூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
செஞ்சி: செஞ்சியில் பேருந்து நிலையம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்துக்கு, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ மலா் தூவி மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சிக்கு, செஞ்சி நகர திமுக செயலா் காா்த்திக் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்ற தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், நகர துணைச் செயலா்கள் சங்கா், செயல்மணி, சுமித்ராசங்கா், பொருளாளா் நெடுஞ்செழியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மந்தைவெளி திடலில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கும், நான்கு முனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் அமைச்சா் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில், தெற்கு மாவட்டச் செயலா் க.காா்த்திகேயன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆ.அங்கையா்கண்ணி, கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவரும், நகரச் செயலருமான இரா.சுப்ராயலு உள்ளிட்டோா் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.