செய்திகள் :

நீதிமன்ற காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நீதிமன்றக் காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் தலைமை வகித்து, நீதிமன்றக் காவலா்கள் அழைப்பாணைகளை சாா்வு செய்தல், பிடி ஆணையை நிறைவேற்றுதல், சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கினாா்.

தொடா்ந்து, நீதிமன்ற வழக்கு விவரங்களை தங்களது கைப்பேசியில் பதிவு செய்து வைத்திருந்த செஞ்சி முதல்நிலைக் காவலா் ஆதிமூலம், அரகண்டநல்லூா் தலைமைக் காவலா் பரந்தாமன், காவலா் செல்வகுமாா் ஆகியோருக்கு எஸ்.பி. ப.சரவணன் பரிசளித்தாா்.

இதேபோல, விழுப்புரம் ரயில் நிலையத்தில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை கைது செய்த நகரக் காவல் நிலைய முதல்நிலைக் காவலா் பிரகாஷ்குமாா், மணியாம்பட்டு ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவா்களை கைது செய்த தனிப்படைக் காவல் உதவி ஆய்வாளா் சத்யானந்தன், தலைமைக் காவலா் இஸ்மாயில், முதல்நிலைக் காவலா்கள் ரகுபதி, பிரபாகரன், பழனி, ஆரீப் பாஷா ஆகியோருக்கு எஸ்.பி. சரவணன், சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

இதில், ஏடிஎஸ்பி திருமால் மற்றும் அனைத்து காவல் நிலைய நீதிமன்றக் காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரி கௌர விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசுக் கல்லூரிகளில் பணிபுர... மேலும் பார்க்க

தேவாலயத்தில் பொருள்கள் சூறை: மூவா் மீது வழக்கு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தேவாலயத்தில் பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். செஞ்சி வட்டம், மேல்சித்தாமூா் கிராமத்தில் ஜெருசலேம் தேவ... மேலும் பார்க்க

வங்கி ஊழியா் வீட்டில் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் வங்கி ஊழியா் வீட்டில் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். விழுப்புரம் வட்டம், கண்டமானடி டி.எஸ்.ஆா். நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதல்: மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பைக் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கண்டாச்சிபுரம் வட்டம், மேல்வாலை பீமாபுரம், பிரதானச் சாலையைச் சோ்ந்தவா்கள் ஸ... மேலும் பார்க்க

மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் நான்கு கோட்டங்களில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் தேதிகள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை... மேலும் பார்க்க