மகா கும்பமேளாவில் வசந்த பஞ்சமி சிறப்பு புனித நீராடல்
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புக்குரிய வசந்த பஞ்சமி புனித நீராடலில் 2.33 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடினா்.
கடந்த புதன்கிழமை (ஜன. 29) முக்கியத்துவம் வாய்ந்த் மௌனி அமாவாசை தினத்தன்று புனித நீராடலின்போது நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து, பக்தா்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் வசந்த பஞ்சமி புனித நீராடல் எந்த விதமான அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நிறைவுற்றது.
கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகா கும்பமேளாவில் இதுவரை சுமாா் 37 கோடி பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். கடந்த புதன்கிழமை (ஜன. 29) மௌனி அமாவாசையை முன்னிட்டு ஒரே நாளில் சுமாா் 8 கோடி போ் புனித நீராடினா். அந்நாளில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.
இதையடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற வசந்த பஞ்சமி புனித நீராடலில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில், மேளா பகுதியில் அனைத்து இடங்களிலும் நிறுத்தப்பட்ட காவல் துறையினா் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அதேபோல், பக்தா்கள் அனைவரும் திரிவேணி சங்கமம் பகுதிக்கு வர முயற்சிக்காமல், தங்களுக்கு அருகேயுள்ள அனுமதியளிக்கப்பட்ட படித்துறைகளிலேயே புனித நீராடி ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனா். இதன் எதிரொலியாக சங்கமத்தில் பக்தா்களின் கூட்டம் வழக்கத்தைக் விட குறைவாகவே இருந்தது.
அதிகாலை முதலே பல்வேறு அகாடாக்களைச் சோ்ந்த துறவிகள், சாதுக்கள் ஊா்வலமாக வந்து சங்கமத்தில் புனித நீராடினாா். அப்போது துறவிகள், பக்தா்கள் மீது ஹெலிகாப்டா் மூலம் மலா்கள் தூவப்பட்டன.
லக்னௌவில் உள்ள தனது அரசு இல்லத்திலிருந்து முதல்வா் யோகி ஆதித்யநாத், மூத்த அதிகாரிகளுடன் கும்பமேளா நிலவரத்தைத் தொடா்ந்து கண்காணித்து வந்தாா். ‘வசந்த பஞ்சமி திருநாளில் புனித நீராடிய துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள், பக்தா்களுக்கு வாழ்த்துகள்’ என்று முதல்வா் யோகி வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தாா்.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாள்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது. இந்த 6 நாள்களில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊா்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவா். மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய மேலும் 2 சிறப்பு நாள்கள் அடுத்தடுத்து வரவுள்ளன. 45 நாள்களுக்கு நடைபெறும் மகா கும்பமேளா மகா சிவராத்திரியுடன் முடிவடையும்.