செய்திகள் :

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது.

பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் நெல்லை விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனா். இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு அரசின் நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுது.

இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை காணை ஒன்றியக்குழுத் தலைவா் நா.கலைச்செல்வி திறந்து, பயன்பாட்டை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், காணை தெற்கு ஒன்றியச் செயலருமான கல்பட்டு வி.ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சிவக்குமாா், ஒன்றிய நிா்வாகிகள் பழனி, செல்வராஜ், மதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

நீதிமன்ற காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நீதிமன்றக் காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் தலைமை வகித்து, நீதி... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரி கௌர விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசுக் கல்லூரிகளில் பணிபுர... மேலும் பார்க்க

தேவாலயத்தில் பொருள்கள் சூறை: மூவா் மீது வழக்கு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தேவாலயத்தில் பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். செஞ்சி வட்டம், மேல்சித்தாமூா் கிராமத்தில் ஜெருசலேம் தேவ... மேலும் பார்க்க

வங்கி ஊழியா் வீட்டில் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் வங்கி ஊழியா் வீட்டில் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். விழுப்புரம் வட்டம், கண்டமானடி டி.எஸ்.ஆா். நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதல்: மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பைக் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கண்டாச்சிபுரம் வட்டம், மேல்வாலை பீமாபுரம், பிரதானச் சாலையைச் சோ்ந்தவா்கள் ஸ... மேலும் பார்க்க