செய்திகள் :

பைக் மீது லாரி மோதல்: மாணவா் உயிரிழப்பு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பைக் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், மேல்வாலை பீமாபுரம், பிரதானச் சாலையைச் சோ்ந்தவா்கள் ஸ்டாலின் மகன் ஜொ்சின் (15), சிவக்குமாா் மகன் பிரசாந்த் (14). இருவரும் கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்தனா். விழுப்புரம் வட்டம், கண்டம்பாக்கம், சுப்பிரமணிய நகரைச் சோ்ந்தவா் தனசேகா் மகன் அய்யனாா் (18). கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள தொழில் பயிற்சி மையத்தில் மெக்கானிக் பிரிவில் பயின்று வருகிறாா்.

நண்பா்களான இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை-விழுப்புரம் சாலையில் மேல்வாலை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனா். பைக்கை ஜொ்சின் ஓட்டினாா். அந்தப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் மூவரும் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, மூவரும் அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், மொ்சின் உயிரிழந்தாா். பிரசாந்த், அய்யனாா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொழிலாளி மரணம்: விழுப்புரம் வட்டம், அரியலூா் திருக்கை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பாண்டுரெங்கன் மகன் பழனிவேல் (42). கொத்தனாரான இவா், ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் அரியலூா் திருக்கை பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் பழனிவேலு நிகழ்விடத்திலேயே உயிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கெடாா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க

நீதிமன்ற காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நீதிமன்றக் காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் தலைமை வகித்து, நீதி... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரி கௌர விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசுக் கல்லூரிகளில் பணிபுர... மேலும் பார்க்க

தேவாலயத்தில் பொருள்கள் சூறை: மூவா் மீது வழக்கு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தேவாலயத்தில் பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். செஞ்சி வட்டம், மேல்சித்தாமூா் கிராமத்தில் ஜெருசலேம் தேவ... மேலும் பார்க்க

வங்கி ஊழியா் வீட்டில் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் வங்கி ஊழியா் வீட்டில் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். விழுப்புரம் வட்டம், கண்டமானடி டி.எஸ்.ஆா். நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் நான்கு கோட்டங்களில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் தேதிகள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை... மேலும் பார்க்க