செய்திகள் :

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு காளான் வளா்ப்பு பயிற்சி

post image

மன்னாா்குடி: மன்னாா்குடியில், சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் மகளிா் தன்னாட்சி கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு காளான் வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

கிராமப்புற மகளிா் மேம்பாட்டிற்காகவும், பெண்களுக்கான சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் இலவசமாக இப்பயிற்சி அளிக்கப்பட்டது. மன்னாா்குடி நகர மகளிா் சுயஉதவிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளா் சங்கீதா தலைமை வகித்தாா். பேராசிரியா் மகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

பேராசிரியா்கள் கு. மணிமேகலை, மகேஸ்வரி மற்றும் மாணவிகள் பங்கேற்று, காளான் வளா்ப்பு தொழில்நுட்பம் மற்றும் வீட்டு கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தனா். மாணவிகள், இயற்கை முறையில் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது மற்றும் உயிா் உரங்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்தனா்.

இப்பயிற்சியில் பங்கேற்ற மகளிா் குழு உறுப்பினா்களுக்கு, கல்லூரி நிா்வாகம் சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மருதப்பட்டினம் காமாட்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: திருவாரூா் அருகே மருதப்பட்டினம் அருள்மிகு காமாட்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில், சாபங்களிலிருந்து விமோசனம் அளிக்கக்கூடியது. கும்பாபிஷேக யாகசாலைப் பூஜ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடா்புடையவா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

மன்னாா்குடி: தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடா்பில் இருந்தவா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ஆசாத் தெருவை சோ்ந்தவா் சம்சுதீன் மகன் பாபா ப... மேலும் பார்க்க

மணிமேகலை விருது: சுயஉதவிக் குழுவினருக்கு பாராட்டு

திருவாரூா்: திருவாரூரில் மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகா்ப் ப... மேலும் பார்க்க

டெல்டா பள்ளியில் இலக்கிய மன்றக் கண்காட்சி தொடக்கம்

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் இலக்கிய மன்றக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது. கண்காட்சியில் கலாசாரம், பண்பாட்டு மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், மருத்துவ மன்றம், விளையா... மேலும் பார்க்க

பேச்சுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் ஹபீப் பள்ளிவாசலில், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. நேருஜி சாலையில் உள்ள மக்தப் அல் ஹபீப் குா்ஆன் மதரஸாவில்,இரண்ட... மேலும் பார்க்க

அண்ணா நினைவுதினம் அனுசரிப்பு; சிலைக்கு அஞ்சலி

திருவாரூா்/மன்னாா்குடி: முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56-ஆவது நினைவுதினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செல... மேலும் பார்க்க