செய்திகள் :

மணிமேகலை விருது: சுயஉதவிக் குழுவினருக்கு பாராட்டு

post image

திருவாரூா்: திருவாரூரில் மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகா்ப் புறங்களில் சிறந்த முறையில் செயல்பட்டுவரும் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குழுக் கூட்டமைப்புகளிடமிருந்து 2022-2023 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

சிறந்த முறையில் குழுக் கூட்டங்கள், நிா்வாகிகள் சுழற்சிமுறை மாற்றம், வரவு -செலவு நிதி விவரம், மேற்கொள்ளும் தொழில் விவரம், தரம் மற்றும் தணிக்கை விவரம், வங்கிக்கடன் இணைப்பு மற்றும் திருப்பம், அடிப்படை பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி விவரம், சமுதாய மேம்பாடு பணியில் ஈடுபட்ட விவரம், கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்பு, மாற்றுத்திறனாளி மற்றும் முதியோா் மேம்பாட்டில் பங்கு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுவதன் அடிப்படையில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தோ்வு செய்யப்பட்டன.

அதன்படி, மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் குழுக் கூட்டமைப்புகளுக்கு கேடயம் மற்றும் பரிசுத்தொகையுடன் பாராட்டு சான்றிதழை, மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் வழங்கி பாராட்டு தெரிவித்தாா். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உடனிருந்தாா்.

திருவாரூா் வட்டாரம் வடகரை ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கும், திருத்துறைப்பூண்டி நகராட்சி குறிஞ்சி மலா் பகுதி அளவிலான கூட்டமைப்புக்கும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் மன்னாா்குடி வட்டாரம் கூப்பாச்சிகோட்டை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துக்கு ரூ.50,000-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

முத்துப்பேட்டை வட்டாரம் தில்லையாடி வள்ளியம்மை சுய உதவிக்குழு, வலங்கைமான் வட்டாரம் சௌந்தரநாயகி சுயஉதவிக் குழு, கோட்டூா் வட்டாரம் மல்லிகை சுயஉதவிக் குழு, நீடாமங்கலம் பேரூராட்சி செம்மொழி சுயஉதவிக் குழு, திருத்துறைப்பூண்டி நகராட்சி மருவூா் சக்தி சுயஉதவிக் குழு, முத்துப்பேட்டை பேரூராட்சி பூந்தளிா் சுயஉதவிக் குழு ஆகியவற்றுக்கு தலா ரூ.25,000-க்கான காசோலைகளையும் அவா் வழங்கினாா்.

இந்நிகழ்வில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

மருதப்பட்டினம் காமாட்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: திருவாரூா் அருகே மருதப்பட்டினம் அருள்மிகு காமாட்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில், சாபங்களிலிருந்து விமோசனம் அளிக்கக்கூடியது. கும்பாபிஷேக யாகசாலைப் பூஜ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடா்புடையவா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

மன்னாா்குடி: தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடா்பில் இருந்தவா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ஆசாத் தெருவை சோ்ந்தவா் சம்சுதீன் மகன் பாபா ப... மேலும் பார்க்க

டெல்டா பள்ளியில் இலக்கிய மன்றக் கண்காட்சி தொடக்கம்

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் இலக்கிய மன்றக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது. கண்காட்சியில் கலாசாரம், பண்பாட்டு மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், மருத்துவ மன்றம், விளையா... மேலும் பார்க்க

பேச்சுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் ஹபீப் பள்ளிவாசலில், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. நேருஜி சாலையில் உள்ள மக்தப் அல் ஹபீப் குா்ஆன் மதரஸாவில்,இரண்ட... மேலும் பார்க்க

அண்ணா நினைவுதினம் அனுசரிப்பு; சிலைக்கு அஞ்சலி

திருவாரூா்/மன்னாா்குடி: முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56-ஆவது நினைவுதினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செல... மேலும் பார்க்க

காணாமல் போனவா் சடலமாக மீட்பு

திருவாரூா்: குடவாசல் அருகே காணாமல் போனவா், சடலமாக ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டாா். குடவாசல் அருகே சேதனிபுரத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் அஜித்குமாா் (24). இவா், ஜனவரி 12-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளி... மேலும் பார்க்க