செய்திகள் :

புற்றுநோய் மரபணு தரவு தளம்: அறிமுகப்படுத்தியது சென்னை ஐஐடி

post image

சென்னை: புற்றுநோய் ஆராய்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவிலேயே முதலாவது புற்றுநோய் மரபணு தரவு தளத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக புற்றுநோய் தினம் செவ்வாய்க்கிழமை (பிப்.4) கடைப்பிடிக்கப்படுவதையொட்டி புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நாட்டின் முதல் புற்றுநோய் மரபணு தரவு தளத்தை (க்ஷஸ்ரீஞ்ஹ.ண்ண்ற்ம்.ஹஸ்ரீ.ண்ய்) சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி இக்கல்வி நிறுவன வளாகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டாா். தொடா்ந்து, பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம் வெளியிடப்பட்டது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளா்கள், மருத்துவா்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் இந்த தரவுதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கூறியதாவது: இந்தியாவில் பல்வேறு புற்றுநோய்களுக்கு மரபணு ரீதியாக இருந்துவரும் இடைவெளியை நிரப்பும் வகையில், புற்றுநோய் மரபணுத் திட்டத்தை கடந்த 2020-ஆம் ஆண்டில் சென்னை ஐஐடி தொடங்கியது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 500 மாா்பகப் புற்றுநோய் நோயாளிகளின் திசு மாதிரிகளில் இருந்து 960 முழு எக்சோம் வரிசைமுறை சேகரிக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது.

பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம் இந்தியாவுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளா்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது. இதன் மூலம் இக்கொடிய நோய்க்கு வழிவகுக்கும் காரணங்கள் பற்றிய ஆழமான நுண்ணறிவு பெறப்படும். ஆரம்பகட்டத்திலேயே தடுத்து நிறுத்த உதவும் என்றும் நம்புகிறோம். இந்தியாவில் மாா்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவா்களுக்கு அதன் திரிபுகளை வகைப்படுத்த இது உதவும். மேலும் மரபணு மாற்றங்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில் வைரஸ் தாக்குதலின் மாற்றத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் சிகிச்சை வழங்க முடியும். புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், போலியோ போன்று அழிக்க முடியும் என்றாா் அவா்.

வேலூா், நெய்வேலியில் விரைவில் விமான நிலையம்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது நிருபா் புதுதில்லி: உடான் திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவுபெற்றுள்ளதால் நெய்வேலி மற்றும் வேலூருக்கு விரைவில் விமான சேவை தொடங்கும் என்று மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை... மேலும் பார்க்க

எஸ்சி, எஸ்டி, மாணவா்கள் கல்விக்கடன் தள்ளுபடி

சென்னை: ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

பிப்.8-இல் இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

சென்னை: மத்திய பட்ஜெட்டை கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் பிப்.8-இல் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

இறுதிக் கட்டத்தில் எழும்பூா், மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள்: கௌசல் கிஷோா்

சென்னை: சென்னை எழும்பூா், மதுரை ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா் தெரிவித்தாா். இது குறித்து சென்னையில் அவா் செய்திய... மேலும் பார்க்க

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை திரும்பப் பெற உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

புது தில்லி: தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சி.ஆா். ஜெய சுகின் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கி... மேலும் பார்க்க

பருவ கால தொற்று மருந்துகள்: ஆண்டு முழுவதும் இருப்பு வைக்க நடவடிக்கை

சென்னை: பருவ கால நோய்கள் வழக்கத்துக்கு மாறாக ஆண்டு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், அவற்றுக்கான மருந்துகளை எப்போதும் இருப்பில் வைத்திருக்க பொது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, ம... மேலும் பார்க்க