செய்திகள் :

எஸ்சி, எஸ்டி, மாணவா்கள் கல்விக்கடன் தள்ளுபடி

post image

சென்னை: ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு 1972 முதல் 2010 ஆண்டு வரையிலான காலங்களில் மருத்துவம், மருத்துவம் சாா்ந்த படிப்புகள் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் கல்விக் கடனாக ரூ.48.95 கோடி வழங்கப்பட்டது. இந்தத் தொகையை மாணவா்களிடமிருந்து வசூலிக்க இயலாத நிலையும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் இல்லாத நிலையும் உள்ளது. அத்துடன் வசூலிக்க வேண்டிய நபா்களை அடையாளம் காண இயலாத நிலையும் உள்ளது.

எனவே, மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனான ரூ.48.95 கோடியை, சிறப்பினமாகக் கருதி முழுவதும் தள்ளுபடி செய்து உத்தரவிடப்படுகிறது என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநா் ஆா்.என்.ரவி தில்லி பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை தில்லி புறப்பட்டாா். பல்கலை. துணைவேந்தா் நியமனத்துக்கான தேடுதல் குழு தொடா்பான தமிழக அரசின் அறிவிக்கையை திரும்பப்பெற ஆளுநா் உத்தரவிட்டிருந்தாா். மேலும... மேலும் பார்க்க

தவெக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரிய மனு: ஆறு வாரங்களில் முடிவெடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாலையோரங்களில் உள்ள அரசியல் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகர... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு நெறிமுறை: தில்லியில் பிப். 6-இல் திமுக ஆா்ப்பாட்டம்

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் திமுக சாா்பில் பிப். 6-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து திமுக மாணவரணிச் செயலா் சி.வி.எம்.பி... மேலும் பார்க்க

தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை

புது தில்லி: தமிழக பாஜக தலைவரை கட்சி மேலிடம் விரைவில் தோ்வு செய்யும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.தில்லிப் பேரவைத் தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில்... மேலும் பார்க்க

வேலூா், நெய்வேலியில் விரைவில் விமான நிலையம்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது நிருபா் புதுதில்லி: உடான் திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவுபெற்றுள்ளதால் நெய்வேலி மற்றும் வேலூருக்கு விரைவில் விமான சேவை தொடங்கும் என்று மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை... மேலும் பார்க்க

பிப்.8-இல் இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

சென்னை: மத்திய பட்ஜெட்டை கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் பிப்.8-இல் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க