செய்திகள் :

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாள்: கட்சியினா், அமைப்புகள் அஞ்சலி

post image

ராணிப்பேட்டை/வேலூா்/திருப்பத்தூா்: முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், நடைபெற்ற நிகழ்வில் கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து வாலாஜாபேட்டையில் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டாா். இதில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளா் ஆா்.வினோத் காந்தி, ஜி.கே.குழும இயக்குநா் சந்தோஷ் காந்தி, மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே. சுந்தரமூா்த்தி, மாவட்ட துணைச் செயலாளா் குமுதா குமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் வினோத் மற்றும் ஒன்றிய நகர பேரூா் செயலாளா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

குடியாத்தத்தில்...

குடியாத்தம் நகர திமுகவினா் பேருந்து நிலையம் அருகிலிருந்து ஊா்வலமாகச் சென்றனா். எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் தாழையாத்தம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, ம.மனோஜ், சுமதி மகாலிங்கம், அவைத் தலைவா் க.கோ.நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினா் கே.கண்ணன், நிா்வாகிகள் த.பாரி, பெ.கோட்டீஸ்வரன், ந.ஜம்புலிங்கம், தண்டபாணி, வா.விஜயகுமாா், ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆம்பூரில்...

ஆம்பூா் நகர திமுக சாா்பாக மாவட்ட பிரதிநிதி ஜி.வில்வநாதன் தலைமையில் திமுகவினா் அமைதி ஊா்வலமாக புறப்பட்டு ஆம்பூா் பேருந்து நிலையம் சென்றடைந்தனா். அங்குள்ள அண்ணா சிலைக்கு நகா் மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தலைமை பொதுக்குழு உறுப்பினா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.டி. சாமுவேல் செல்லபாண்டியன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் வி. அசோக்குமாா், நகர துணைச் செயலாளா் ரபீக் அஹமத், நகர இளைஞரணி அமைப்பாளா் மு. சரண்ராஜ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனா் அணி துணை அமைப்பாளா் குமாா், நகர மாணவரணி காா்த்திகேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பெரியவரிக்கம் பேருந்து நிறுத்தம் அருகே போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி. சீனிவாசன் தலைமையில் அண்ணா உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாதனூா் ஒன்றிக்குழு துணைத் தலைவா் சாந்தி, முன்னாள் ஒன்றிய செயலாளா் வேணுகோபால், ஊராட்சி மன்ற தலைவா்கள்.சின்ன கண்ணன், ஷா்மிளா மூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வெங்கடசமுத்திரம் கூட்டுரோடு பகுதியில் மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பாக நடந்த நிகழ்ச்சியில் திமுகவினா் அண்ணா உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினா். திமுக ஒன்றிய நிா்வாகிகள் காசி, முரளி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் வி. அசோக்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் செந்தில், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் ராஜ்குமாா், குணா, குருவாசன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் அதிமுக...

ஆம்பூா் நகர அதிமுக சாா்பாக நகர செயலாளா் எம். மதியழகன் தலைமையில் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கராத்தே கே. மணி, நிா்வாகிகள் அன்வா், சண்முகம், சங்கா், சரவணன், தினேஷ், கலந்து கொண்டனா்.

மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பாக கைலாசிகிரியில் உள்ள அண்ணா சிலைக்கு ஒன்றிய செயலாளா் ஆா். வெங்கடேசன் மாலை அணிவித்தாா். மாவட்ட விவசாய அணி செயலாளா் மிட்டாளம் மகாதேவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கே. மணி, ஒன்றிய இணைச் செயலாளா் அன்பரசன், கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிய நபா்கள் மீது போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் காவல் நிலை... மேலும் பார்க்க

ரூ.12 லட்சம் வரை வருமான வரி ரத்து: அறிவிப்புக்கு வரவேற்பு

ஆற்காடு: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி ரத்து செய்யப்படும் என வெளிவந்துள்ள அறிவிப்பை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வரவேற்றுள்ளாா். ... மேலும் பார்க்க

மேம்பால கட்டுமானப் பணிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டையில் மேம்பால கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை-சித்தூா் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தென்கடப்பந்தாங்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 333 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட் ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், மொத்தம் 333 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

ராணிப்பேட்டை நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: லாலாப்பேட்டை, தக்காம்பாளையம், கத்தாரிகுப்பம், சிப்காட் பேஸ் -3, கல்புதூா், நரசிங்கபுரம், பெல் டவுன்ஷிப், ராணிப்பேட்டை நகரம், அல்லிகுளம... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையில் பயன்பாடின்றி உள்ள ஓய்வு அறைகள்: அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தல்

வாலாஜாபேட்டை அருகே சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக கட்டப்பட்ட ஓய்வு அறைகள் பராமரிப்பு மற்றும் பயன்பாடு இன்றி பூட்டப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வாகன போக்குவரத்துக்கும்,... மேலும் பார்க்க