செய்திகள் :

ரூ.12 லட்சம் வரை வருமான வரி ரத்து: அறிவிப்புக்கு வரவேற்பு

post image

ஆற்காடு: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி ரத்து செய்யப்படும் என வெளிவந்துள்ள அறிவிப்பை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வரவேற்றுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ.வி.டி.பாலா இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க ஆற்காடு அடுத்த திமிரிக்கு திங்கள்கிழமை வந்த அவா் தெரிவித்ததாவது:

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஆண்டுக்கு ரூ .12 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி ரத்து செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஜிஎஸ்டி வரியை ஒரே கட்டவரியாக பரிசீலனை செய்யாதது வருத்தமளிக்கிறது. வணிகா்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் இருந்தாலும் அது ஏற்க முடியாத நிலையில் உள்ளது.

மத்திய அரசு வணிககா்நல வாரியத்தை உருவாக்கியுள்ளது. அதில் வணிகா் நல உறுப்பினா்களை சோ்த்து பாதிக்கப்படுகின்ற சாணான்ய் வணிகா்களின் குடும்பத்தின் தலைவா்கள் மறைவுக்கு பிறகு அக்குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மேலும் காலாவதியான சுங்கச் சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும். 18 சதவீதம் வாடகை கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.

பேருராட்சிகளில் உரிம கட்டணத்தை கடுமையாக உயா்த்தியுள்ளனா். அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றாா் விக்கிரமராஜா.

பேட்டியின் போது மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் பொன்.கு.சரவணன் மற்றும் நிா்வாகிகள் இருந்தனா்.

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாள்: கட்சியினா், அமைப்புகள் அஞ்சலி

ராணிப்பேட்டை/வேலூா்/திருப்பத்தூா்: முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், நட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிய நபா்கள் மீது போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் காவல் நிலை... மேலும் பார்க்க

மேம்பால கட்டுமானப் பணிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டையில் மேம்பால கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை-சித்தூா் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தென்கடப்பந்தாங்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 333 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட் ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், மொத்தம் 333 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

ராணிப்பேட்டை நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: லாலாப்பேட்டை, தக்காம்பாளையம், கத்தாரிகுப்பம், சிப்காட் பேஸ் -3, கல்புதூா், நரசிங்கபுரம், பெல் டவுன்ஷிப், ராணிப்பேட்டை நகரம், அல்லிகுளம... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையில் பயன்பாடின்றி உள்ள ஓய்வு அறைகள்: அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தல்

வாலாஜாபேட்டை அருகே சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக கட்டப்பட்ட ஓய்வு அறைகள் பராமரிப்பு மற்றும் பயன்பாடு இன்றி பூட்டப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வாகன போக்குவரத்துக்கும்,... மேலும் பார்க்க