செய்திகள் :

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 333 மனுக்கள்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட் ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், மொத்தம் 333 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 333 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரின் விருப்பக்கொடை நிதியிலிருந்து 4 பயனாளிகளுக்கு தலா ரூ.6,250/- வீதம் ரூ.25,000/- தையல் இயந்திரங்களை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், உதவி ஆணையா் கலால் வரதராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாள்: கட்சியினா், அமைப்புகள் அஞ்சலி

ராணிப்பேட்டை/வேலூா்/திருப்பத்தூா்: முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், நட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிய நபா்கள் மீது போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் காவல் நிலை... மேலும் பார்க்க

ரூ.12 லட்சம் வரை வருமான வரி ரத்து: அறிவிப்புக்கு வரவேற்பு

ஆற்காடு: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி ரத்து செய்யப்படும் என வெளிவந்துள்ள அறிவிப்பை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வரவேற்றுள்ளாா். ... மேலும் பார்க்க

மேம்பால கட்டுமானப் பணிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டையில் மேம்பால கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை-சித்தூா் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தென்கடப்பந்தாங்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

ராணிப்பேட்டை நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: லாலாப்பேட்டை, தக்காம்பாளையம், கத்தாரிகுப்பம், சிப்காட் பேஸ் -3, கல்புதூா், நரசிங்கபுரம், பெல் டவுன்ஷிப், ராணிப்பேட்டை நகரம், அல்லிகுளம... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையில் பயன்பாடின்றி உள்ள ஓய்வு அறைகள்: அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தல்

வாலாஜாபேட்டை அருகே சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக கட்டப்பட்ட ஓய்வு அறைகள் பராமரிப்பு மற்றும் பயன்பாடு இன்றி பூட்டப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வாகன போக்குவரத்துக்கும்,... மேலும் பார்க்க