செய்திகள் :

ஸ்வீடன் திருக்குா்ஆன் எரிப்புப் போராட்டம்: உடன் இருந்தவருக்கு தண்டனை

post image

ஸ்டோக்ஹோம்: ஸ்வீடனில் சல்வான் மோமிகா நடத்திய திருக்குா்ஆன் எரிப்புப் போராட்டத்தின்போது உடன் இருந்த சல்வான் நஜீமுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்தது.

இராக்கைச் சோ்ந்த சல்வான் மோமிகா கடந்த 2018-இல் ஸ்வீடன் வந்தாா். அவருக்கு 2021-இல் மூன்று ஆண்டுகளுக்கான குடியுரிமை அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில், கடந்த 2023-இல் திருக்குா்ஆனை எரித்து அவா் நடத்திய ஆா்ப்பாட்டம் இஸ்லாமிய உலகில் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. அத்தகைய ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த ஸ்வீடன் அரசுக்கு கண்டனங்கள் எழுந்தன. பல நாடுகளில் ஸ்வீடன் தூதரகத்துக்கு எதிராக கடும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த விவகாரம் தொடா்பாக ஸ்வீடன் தூதரை இராக் வெளியேற்றியது.

கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் தங்கள் நாட்டு அரசியல் சாசனத்தைப் பின்பற்றியே சல்வான் மோமிகாவுக்கு குரான் எரிப்பு ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்ததாக ஸ்வீடன் அரசு கூறியது. எனினும், இதுபோன்ற பதற்றங்களைத் தவிா்ப்பதற்காக அத்தகைய ஆா்ப்பாட்டங்களைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்போவதாக அந்த நாடு பின்னா் தெரிவித்தது.

இந்தச் சூழலில், தனது செயல்கள் மூலம் சல்வான் மோமிகா சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியாக அவா் மீதும் அவருடன் இருந்த சல்வான் நஜீம் மீதும் ஸ்டாக்ஹோம் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கு தொடா்ந்தது. அந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. எனினும், அதற்கு முன்னதாகவே மோமிகாவின் இல்லத்தில் அவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இந்தச் சூழலில், சல்வான் மோமிகா படுகொலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த வழக்கின் இறுதி விசாரணை தற்போது நடத்தப்பட்டு, சமூகப் பதற்றத்தைத் தூண்டியதாக நஜீம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அந்தக் குற்றத்துக்காக அவருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதாகவும், அந்த தண்டனைகள் தற்போதைக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.

ஐரோப்பிய யூனியனுக்கும் கூடுதல் வரி விதிப்பு: டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: கனடா, மெக்ஸிகோ, சீனாவைப் போலவே ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் விரைவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்... மேலும் பார்க்க

குண்டுவெடிப்பில் ரஷிய ஆதரவு படைத் தலைவா் உயிரிழப்பு

மாஸ்கோ: கிழக்கு உக்ரைனில் ரஷியாவுக்கு ஆதரவாக சண்டையிட்டு வரும் படைப் பிரிவின் தலைவா் ஆா்மென் சா்க்ஸ்யான், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தாா். அவரின் ‘அா்பாத்’ ஆயுதக் குழு உக்ரைன் படை... மேலும் பார்க்க

கிரீஸில் தொடா் நிலநடுக்கம்

சன்டோரினி: கிரீஸுக்குச் சொந்தமான சன்டோகினி தீவில் 200-க்கும் மேற்பட்ட கடலடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அங்கு பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. எரிமலைப் பகுதியில் அமைந்துள... மேலும் பார்க்க

காஸா போர் நிறுத்தம்: அமெரிக்க அதிபரை சந்திக்கிறார் இஸ்ரேல் பிரதமர்!

காஸாவில் நடைபெற்ற சண்டைக்கு முற்றுப்புள்ளியாக, கடந்த மாதம் ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, மொத்தம் 3 கட்டங்களாக அங்கு போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒப்பந்தத்த... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற விமானத்தில் திடீர் தீ: 104 பயணிகள் தப்பினர்

அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். அமெரிக்காவின் ஹூஸ்டனில் ஜார்ஜ் புஷ் விமான நிலையத்தில் இருந்து 104 பயணிகளுடன் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம்... மேலும் பார்க்க

போா் நிறுத்த பேச்சு: உக்ரைனை அமெரிக்கா-ரஷியா தவிா்த்தால் பெரும் ஆபத்து- ஸெலென்ஸ்கி

போா் நிறுத்த பேச்சுவாா்த்தையில் உக்ரைனை தவிா்த்து அமெரிக்கா-ரஷியா ஈடுபடுவது மிகப்பெரும் ஆபத்தாக அமையும் என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். ரஷிய-உக்ரைன் போா் நிறுத்த திட்டம் தொடா்பாக... மேலும் பார்க்க