மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் நான்கு கோட்டங்களில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் தேதிகள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் மு.நாகராஜ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாா்பில் மாதந்தோறும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பிப்ரவரி 4,18,25 (செவ்வாய்க்கிழமைகள்) ஆகிய தேதிகளில் முறையே விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் ஆகிய மின்வாரியக் கோட்டச் செயற்பொறியாளா் அலுவலகங்களிலும், பிப்ரவரி 12-ஆம் தேதி (புதன்கிழமை) கண்டமங்கலம் கோட்டத்திலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
எனவே, தங்கள் பகுதியில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் மின் நுகா்வோா் பங்கேற்று, குறைகளை கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம். மேலும், குறைதீா் கூட்டம் நடைபெறும் நாள் அரசு விடுமுறையாக இருப்பின், விடுமுறைக்கு அடுத்து வரும் வேலை நாளில் கூட்டம் நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.