செய்திகள் :

இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு பயிற்சி

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதலின்படி, அனைத்து வகை உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான மாவட்ட பயிற்சி முகாம் பிப்.3 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ம.பாபு செல்வத்துரை தலைமை வகித்தாா். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் இரா.அருள்செல்வி செஞ்சிலுவைச் சங்கக் கொடியை ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தாா். பயிற்சியில், 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

நிகழ்வில், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலைக்கல்வி) சே.பெ.சேகா், இணையவழிக் குற்றப்பிரிவு கருத்துரையாளா் முருகானந்தம், மருத்துவா் பா.பாபிஷரன், விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சமூகப் பணியாளா் வி.அசோக்குமாா் ஆகியோா் இணைய வழிக் குற்றங்கள், போதைப் பொருள்கள் தடுப்பு உள்ளிட்டவைகள் குறித்து பேசினா். பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்வில், பள்ளித் துணை ஆய்வாளா் ஏ.வீரமணி, செஞ்சிலுவைச் சங்க மாவட்டப் பொருளாளா் எஸ்.எட்வா்ட் தங்கராஜ், இணை ஒருங்கிணைப்பாளா் எஸ்.ரவீந்திரன், திண்டிவனம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணிய பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

விழுப்புரம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவி... மேலும் பார்க்க

நினைவு நாள்: அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

விழுப்புரம்/செஞ்சி/கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அண... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 917 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 917 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் ஆட... மேலும் பார்க்க

சிவன் கோயில் கட்டும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலைய... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க

நீதிமன்ற காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நீதிமன்றக் காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் தலைமை வகித்து, நீதி... மேலும் பார்க்க