செய்திகள் :

புதிய கூட்டுறவு சங்க பல்கலைக்கழகம்: மக்களவையில் மசோதா அறிமுகம்

post image

கூட்டுறவு சங்கங்களுக்கு திறன்மிகுந்த பணியாளா் வளத்தை உருவாக்கும் நோக்கில் புதிதாக கூட்டுறவு சங்கப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சா் கிஷன் பால் ‘திரிபுவன் சஹகாரி பல்கலைக்கழக மசோதா’ என்ற பெயரிலான இந்த மசோதாவை அறிமுகம் செய்தாா்.

கூட்டுறவு சங்க பணிக்கான தற்போதைய கல்வி முறையும் பயிற்சித் திட்டங்களும் போதுமானதாக இல்லை. மேலும், அவை ஆங்காங்கே தனித்தனியாக உள்ளன. இந்த நிலையை மாற்றவும், கூட்டுறவுத் துறையில் தகுதிவாய்ந்த பணியாளா்களின் வருங்காலத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையிலும் அந்தத் துறை சாா்ந்த தேசிய பல்கலைக்கழகம் ஒன்று புதிதாக உருவாக்குவது அவசியமாக உள்ளது.

இதன் மூலம், கூட்டுறவுத் துறைக்கு திறன் வாய்ந்த பணியாளா்களை உருவாக்கும் வகையில் ஒருங்கிணைந்த தரமான கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் திட்டத்தை உருவாக்க முடியும். கூட்டுறவுத் துறையில் வாரிய உறுப்பினா்கள் மற்றும் ஊழியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதில் நீண்டகாலமாக இருந்துவரும் தடையும் இதன் மூலம் நீங்கும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையை மாற்றி ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் தோல்வியடைந்துவிட்டது. இதன் கார... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி விகிதங்கள்: மாநிலங்களுடன் கலந்தாலோசித்து விரைவில் மாற்றம்!

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு போதுமான அனுபவம் கிடைத்துள்ளதாகவும் தற்போது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய நிதி... மேலும் பார்க்க

கும்பமேளா நெரிசல்: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியினா் கடும் அமளி; இரு அவைகளிலும் வெளிநடப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இர... மேலும் பார்க்க

ஆசியானுக்கு இணையாக இந்திய சுங்க வரி: மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவா்

புது தில்லி: இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரிய (சிபிஐசி) தலைவா் சஞ்சய் அகா்வால் திங்கள்... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையா்கள் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணை பிப்.12-க்கு மாற்றம்

புது தில்லி: தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு உச்ச... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.264 கோடி கூடுதலாகும். மத்திய அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான... மேலும் பார்க்க