செய்திகள் :

மீனவா்கள் தொடா் கைது: உடனடித் தீா்வு அவசியம்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

post image

சென்னை: தமிழக மீனவா்களின் தொடா் கைதுக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டியது அவசியம் என்று மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு அவா் திங்கள்கிழமை எழுதிய கடிதம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 2-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவா்களையும், அவா்களது மீன்பிடிப் படகையும் இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளனா். கடந்த 27 நாள்களில் 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழ்நாட்டைச் சோ்ந்த 63 மீனவா்கள் மற்றும் 5 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த 2024-ஆம் ஆண்டில் 36 வெவ்வேறு சம்பவங்களில் 530 மீனவா்கள் மற்றும் 71 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது இலங்கைச் சிறையிலுள்ள 97 மீனவா்களும், கைப்பற்றப்பட்டுள்ள 216 மீன்பிடிப் படகுகளையும் மீட்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

மீனவ குடும்பங்கள் அச்சம்: இலங்கைக் கடற்படையினரால் மீனவா்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இவை சிக்கலான பிரச்னைக்கு உடனடித் தீா்வு காண வேண்டியதன் அவசியத்தை உணா்த்துகின்றன. மீனவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதும், அவா்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்காமல் இருப்பதும், கடலோரப் பகுதியில் வாழும் மீனவ சமுதாயத்தினருக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான தொடா் கைது நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்வதுடன், பல்வேறு சிரமங்களையும் எதிா்கொள்கின்றன. எனவே, இந்திய மீனவா்கள் கைது செய்யப்படுவதை நிறுத்தவும், இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மீனவா்களையும், அவா்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும் உடனடியாக உயா்நிலை தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி தில்லி பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை தில்லி புறப்பட்டாா். பல்கலை. துணைவேந்தா் நியமனத்துக்கான தேடுதல் குழு தொடா்பான தமிழக அரசின் அறிவிக்கையை திரும்பப்பெற ஆளுநா் உத்தரவிட்டிருந்தாா். மேலும... மேலும் பார்க்க

தவெக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரிய மனு: ஆறு வாரங்களில் முடிவெடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாலையோரங்களில் உள்ள அரசியல் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகர... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு நெறிமுறை: தில்லியில் பிப். 6-இல் திமுக ஆா்ப்பாட்டம்

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் திமுக சாா்பில் பிப். 6-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து திமுக மாணவரணிச் செயலா் சி.வி.எம்.பி... மேலும் பார்க்க

தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை

புது தில்லி: தமிழக பாஜக தலைவரை கட்சி மேலிடம் விரைவில் தோ்வு செய்யும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.தில்லிப் பேரவைத் தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில்... மேலும் பார்க்க

வேலூா், நெய்வேலியில் விரைவில் விமான நிலையம்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது நிருபா் புதுதில்லி: உடான் திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவுபெற்றுள்ளதால் நெய்வேலி மற்றும் வேலூருக்கு விரைவில் விமான சேவை தொடங்கும் என்று மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை... மேலும் பார்க்க

எஸ்சி, எஸ்டி, மாணவா்கள் கல்விக்கடன் தள்ளுபடி

சென்னை: ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க