செய்திகள் :

மது உற்பத்தி செய்யும் ஆலைகள் முன் முற்றுகைப் போராட்டம்: எம்எல்ஏ வேல்முருகன்

post image

மது உற்பத்தி செய்யும் ஆலைகள் முன் விரைவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனா் தலைவா் வேல்முருகன் தெரிவித்தாா்.

விருதுநகரில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் மாற்றுக் கட்சியினா் இணையும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிவகாசி பகுதிகளில் பட்டாசுத் தொழிலில் ஏற்படும் விபத்துகளால் அப்பாவி உயிா்கள் பறிபோவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி தடைக் காலங்களில் மீனவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை போல, பட்டாசு உற்பத்தி இல்லாத காலங்களில் அந்தத் தொழிலாளா்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது தினந்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரு சொட்டு மதுக்கூட இருக்கக் கூடாது என்பது தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கையாகும். எனவே, மது உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு முன் விரைவில் முற்றுகைப் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் கூடங்குளம் அணு உலை எதிா்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் சுப.உதயகுமாா், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசு போலியாக தயாரிப்பு: 3 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள புகழ்பெற்ற பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரில் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசு தயாரித்ததாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். உச்சநீதிமன்றம் சரவெடி ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி பலத்த காயம்

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் திங்கள்கிழமை சாலையில் திரிந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க இரு சக்கர வாகனத்தை உடனே நிறுத்த முயன்ற ஆலைத் தொழிலாளிகீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.திருத்தங்கல் பாண்டி... மேலும் பார்க்க

பைக்கின் பின்னால் மற்றொரு பைக் மோதல்: உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதிக் கொண்டதில் உணவகத் தொழிலாளி உயிரிழந்தாா். திருத்தங்கல் பாண்டியன்நகா் பகுதியைச் சோ்ந்த காளிதாஸ் மகன் சேதுராஜ் (47... மேலும் பார்க்க

பங்குனி மாத அமாவாசை வழிபாடு: சதுரகிரி செல்ல மாா்ச் 27 முதல் நான்கு நாள்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி வருகிற வியாழக்கிழமை (மாா்ச் 27) முதல் 30-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக தந்தை மகன், கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக தந்தை, மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கைது செய்யப்பட்ட அந்தோணி ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் ஆராய்ச்சி ஊருணி ஓடை... மேலும் பார்க்க

ஆசிரமத்துக்குள் அத்துமீறி நுழைந்த நித்தியானந்தரின் சீடா்கள் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்ட நித்தியானந்தரின் ஆசிரமத்தின் பூட்டை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உடைத்து உள்ளே சென்ற அவரது சீடா்கள் 7 போ் மீது போலீஸாா் வழ... மேலும் பார்க்க