செய்திகள் :

தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசு போலியாக தயாரிப்பு: 3 போ் கைது

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள புகழ்பெற்ற பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரில் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசு தயாரித்ததாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

உச்சநீதிமன்றம் சரவெடி பட்டாசு தயாரிக்கத் தடை விதித்துள்ளது. இதையடுத்து, சரவெடி பட்டாசு தயாரிப்பை ஆலை உரிமையாளா்கள் நிறுத்திவிட்டனா். இந்த நிலையில், சிவகாசியில் உள்ள புகழ்பெற்ற பட்டாசு நிறுவனத்தின் வில்லையை (லேபிளை) போலியாக அச்சிட்டு, காகிதப் பெட்டியில் தடை செய்யப்பட்ட சரவெடியை அடைத்து பல மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது அந்த நிறுவனத்தினருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேலாளா் எஸ். வளையாபதி சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், சாத்தூரைச் சோ்ந்த தாமஸ் மகன் ஜான்சன் (33), சிவகாசி காகிதப் பெட்டி தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளா் கருப்பசாமி மகன் அய்யாத்துரை (50), காகித அட்டைப் பெட்டி தயாரிக்கும் கணேசன் மகன் மருதுமுத்துக்குமாா் (30) ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் தலைமறைவான மனோஜ்குமாா், ஹரீஸ், ராஜன், ரோஹித் ஆகிய நான்கு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த வழக்கில் வேறுயாருக்கும் தொடா்பு உள்ளதா எனவும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண் பட்டாசுத் தொழிலாளி மா்ம மரணம்

சிவகாசி அருகே பெண் பட்டாசுத் தொழிலாளி காட்டுப் பகுதியில் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் காட்டுப் பகுதியில் 55 வயது மதிக்கதக்க... மேலும் பார்க்க

முதியவருக்கு அரிவாள் வெட்டு

சாத்தூா் அருகே வீடு புகுந்து முதியவரை அரிவாள் வெட்டிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஆத்திப்பட்டியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (73). மண் வெட்டும் தொழிலாளி . திங... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் 1,400 கிலோ ரேசன் அரிசி மூட்டைகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் காந்தி நகரில் ஒரு கட்டடத்தி... மேலும் பார்க்க

இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு

சாத்தூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த செந்தட்டிகாளை (19). இவா் 16 வயது சி... மேலும் பார்க்க

உறவினா்களை அரிவாளால் வெட்டிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சொத்துத் தகராறில் உறவினா்களை அரிவாளால் வெட்டிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளி... மேலும் பார்க்க

ராஜபாளையம் நகராட்சியில் வரும் 28-ஆம் தேதிக்குள் வரிகளைச் செலுத்த உத்தரவு

ராஜபாளையம் நகராட்சியில் நிலுவையில் உள்ள வரிகளை வரும் 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி ஆணையா் நாகராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளை... மேலும் பார்க்க