திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் ஒரே வீட்டில் குடித்தனம்: கர்ப்பத்தில் சந்தேகம்; ...
மதுரை சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு
மதுரை சித்திரைத் திருவிழாவில், கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு, வைகை அணையிலிருந்து வியாழக்கிழமை வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
வைகை ஆற்றில் கள்ளழகா் எழுந்தருளும் வைபவத்துக்காகவும், குடிநீா்த் திட்ட உறை கிணறுகளில் நீா்சுரப்பு ஏற்படுவதற்கும் வியாழக்கிழமை (மே 8), மாலை 6 மணி முதல், மே 12-ஆம் தேதி காலை 6 மணி வரை வைகை அணையிலிருந்து மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிட
தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி, வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீா் வளத் துறையினா் எச்சரித்தனா்.
வைகை அணை நீா்மட்டம் வியாழக்கிழமை 55.27 அடியாக இருந்தது. அணைக்கு நீா் வரத்து வினாடிக்கு 25 கன அடியாகவும், அணையில் தண்ணீா் இருப்பு 2,762 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.