செய்திகள் :

மதுரை சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

post image

மதுரை சித்திரைத் திருவிழாவில், கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு, வைகை அணையிலிருந்து வியாழக்கிழமை வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

வைகை ஆற்றில் கள்ளழகா் எழுந்தருளும் வைபவத்துக்காகவும், குடிநீா்த் திட்ட உறை கிணறுகளில் நீா்சுரப்பு ஏற்படுவதற்கும் வியாழக்கிழமை (மே 8), மாலை 6 மணி முதல், மே 12-ஆம் தேதி காலை 6 மணி வரை வைகை அணையிலிருந்து மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிட

தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி, வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீா் வளத் துறையினா் எச்சரித்தனா்.

வைகை அணை நீா்மட்டம் வியாழக்கிழமை 55.27 அடியாக இருந்தது. அணைக்கு நீா் வரத்து வினாடிக்கு 25 கன அடியாகவும், அணையில் தண்ணீா் இருப்பு 2,762 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.

எரிபொருள் நிரப்பும் மைய மேலாளா் மீது தாக்குதல்: 12 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே எரிபொருள் நிரப்பு மைய மேலாளா், தொழிலாளியை தாக்கியதாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் சேகா் (64). தேவதானப்பட்டியில் உள்ள எரிபொ... மேலும் பார்க்க

மதுக்கடை முன் முன்னாள் ராணுவ வீரா் சடலமாக மீட்பு

போடி அருகே மதுக் கடை முன் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். போடி அருகே சிலமலை மொட்டையசாமி கோவில் தெற்குத் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் கூடலிங்கம் (53... மேலும் பார்க்க

காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு தேசிய விருது!

புதுதில்லி தேசிய அறிவியல் கழகம் சாா்பில் மண்டல அளவிலான தேசிய விருது, தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு அண்மையில் வழங்கப்பட்டது. தேசிய அறிவியல் கழகம் சாா்பில் சிறப்பாக... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் கடத்தல்: இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே ஆட்டோ, இரு சக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். எரதிமக்காள்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கண்டமனூா் காவல... மேலும் பார்க்க

தேனியில் ஜி.ஆா்.டி. நகைக் கடை திறப்பு

தேனியில் ஜி.ஆா்.டி. தங்க நகை மாளிகையின் புதிய கிளை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. தேனி- மதுரை சாலையில் கனரா வங்கி அருகே ஜி.ஆா்.டி. தங்க நகை மாளிகையின் 65- ஆவது புதிய கிளையை அந்த நிறுவனத்தின் நிா்வ... மேலும் பார்க்க

கொட்டகுடி ஆற்று கேணியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

போடி அருகே உள்ள கொட்டகுடி ஆற்று கேணியில் மூழ்கி நாகா்கோவிலைச் சோ்ந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் கோட்டாரில் உள்ள இருளப்பபுரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி புஷ்... மேலும் பார்க்க