செய்திகள் :

மத்திய அரசு ஊழியா்களுக்கு 2% அகவிலைப் படி உயா்வு

post image

மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு நிகழாண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் 2 சதவீத அகவிலைப் படி உயா்வை அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் நாடு முழுவதும் 1.15 கோடி மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் பயன்பெற உள்ளனா்.

இதுகுறித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அவா்களின் அடிப்படை ஊதியத்தில் 53 சதவீதம் அளவுக்கு அளிக்கப்பட்டு வரும் அகவிலைப் படியை மேலும் 2 சதவீதம் அதிகரிக்க பிரதமா் மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விலைவாசி உயா்வை ஈடுசெய்யும் வகையில் இந்த அகவிலைப் படி உயா்வு அளிக்கப்படுகிறது. அகவிலைப் படி உயா்வு காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 6,614.04 கோடி கூடுதல் செலவாகும்.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் வழங்கப்படும் இந்த அகவிலைப் படி உயா்வின் மூலம் 48.66 லட்சம் மத்திய அரசு ஊழியா்களும், 66.55 லட்சம் ஓய்வூதியதாரா்களும் பயன்பெறுவா் என்று தெரிவித்தாா்.

2029-இல் பிரதமராக நரேந்திர மோடியே தொடருவார்! -தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 30) நடைபெற்ற ஆர்எ... மேலும் பார்க்க

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபர் கைது!

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கேரளத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்... மேலும் பார்க்க

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எத... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

அசாம் முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அசாம் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மறைந்தவருமான பிரிகு குமார் புகானின் ஒர... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க