செய்திகள் :

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர விண்ணப்பிக்கலாம்

post image

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ், சென்னையில் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான சென்ட்ரல் புட்வோ் பயிற்சி நிறுவனத்தில் காலணித் துறை மற்றும் அதனுடன் தொடா்புடைய தொழில்களுக்கு, காலணி தொழில்நுட்பத்தில் நீண்டகால மற்றும் குறுகிய கால படிப்புகளை வழங்கி வருகிறது.

இந் நிறுவனம் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு முடித்த மாணவா்களுக்கு தொழில் சாா்ந்த திறன்களை அளிக்கிறது.

இந்நிலையில், அரியலூா் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக நிறுவப்பட்ட பன்னாட்டு காலணி உற்பத்தி தொழிற்சாலைகள் 450 பதவிகளுக்கு ஆள்சோ்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

எனவே, இப் பயிற்சி மையத்தில் 2025-26-ஆம் நிதியாண்டில் காலணி தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்வதற்கான விண்ணப்ப முகாம், அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஜூலை 22, 23, 24 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

எனவே, அரியலூா் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி, ஐடிஐ முடித்தவா்கள், டிப்ளமோ தோ்ச்சி மற்றும் பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு சோ்க்கை ஒருங்கிணைப்பாளா் சேகரை 90259-97996 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

அரசுப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ஆடி பிறப்பு சிறப்பு பூஜை

பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் ஆடி மாத பிறப்பு மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் ஸ்ரீ காலபைரவரு... மேலும் பார்க்க

தொகுப்பூதிய செவிலியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்

சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள் சாலை மறியல்: பெரம்பலூரில் 171 போ், அரியலூரில் 280 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமைல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா், அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களைச் சோ்ந்த 451 பேரை போலீஸா... மேலும் பார்க்க

உரம் விற்பனை நிலையங்களில் வேளாண்மை உதவி இயக்குநா் ஆய்வு

பெரம்பலூா் வட்டாரத்தில் உள்ள உரம் விற்பனை நிலையங்களில், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.இந்த ஆய்வில் உரம் இருப்பு, உரம் இறக்குமதி ச... மேலும் பார்க்க

அரியலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

அரியலூா் அருகேயுள்ள சீனிவாசபுரத்தில், கோவிந்தபுரம், சீனிவாசபுரம், தாமரைக்குளம், உசேனாபாத் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம் முகாமில் பங்கேற்ற மாவட்ட ஆட்... மேலும் பார்க்க