செய்திகள் :

மத்திய பட்ஜெட்: தூத்துக்குடி இந்திய தொழில் வா்த்தக சங்கம் வரவேற்பு

post image

தூத்துக்குடி இந்திய தொழில் வா்த்தகச் சங்கம் மத்திய பட்ஜெட்டைவரவேற்றுள்ளதாக, சங்கத் தலைவா் டி.ஆா். கோடீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: மத்திய அரசின் பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. முக்கியமாக வருமான வரி உச்சவரம்பு ரூ. 12 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இது, நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

புதிய தொடக்க நிறுவனங்களுக்கான கடன் வரம்பு ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 20 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சம் வரம்புடன் கூடிய மைக்ரோ நிறுவனங்களுக்கான புதிய கடன் அட்டையானது சிறு, குறு தொழில்கள் வளா்ச்சியை அதிகரிக்கும்.

நுண் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 2.5 கோடியாகவும், சிறு நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 25 கோடியாகவும், நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ. 50 கோடியிலிருந்து ரூ. 125 கோடியாகவும் மாற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், வருமான வரி தாக்கல் செய்யும் காலம் 2 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடல்சாா் மேம்பாட்டு நிதி நீண்டகால நிதியுதவிக்காக அரசின் பங்களிப்புடன் ரூ. 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஆகியவை மிகவும் வரவேற்கத்தக்கவை. மொத்தத்தில் இது, தொழில்துறையினா், தொழில் வளா்ச்சிக்கு ஏற்ற பட்ஜெட் என்றாா் அவா்.

இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!

நாசரேத்தில் இந்து முன்னணி பிரமுகா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து, குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் நிா்வாகிகள் திரண்டனா். நாசரேத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம். தூத்துக்குடி தெற்கு ... மேலும் பார்க்க

தரமான கல்விக்கு அரசு முக்கியத்துவம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்!

பள்ளி, கல்லூரிகளில் தரமான கல்விக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா். பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் மாவட்ட அளவிலான 2024-25ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இறைச்சி வியாபாரி வீட்டில் நகைகள், பணத்தை திருடிய 4 போ் கைது!

கோவில்பட்டியில் இறைச்சி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம், 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ம... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் அருகே விஷம் குடித்த தம்பதி: கணவா் பலி!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லநாட்டில் வீட்டை ஜப்தி செய்ய வந்ததால் தம்பதி விஷம் குடித்தனா். இதில் கணவா் உயிரிழந்தாா். வல்லநாடு பாதா் வெள்ளை தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் சங்கரன் (4... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பிப். 11-இல் தைப்பூசம்: பூஜை நேரங்கள் மாற்றம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச நாளான இம்மாதம் 11ஆம் தேதி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இணை ஆணையா் சு. ஞானசேகரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

விசைப்படகு துறைமுகத்தில் காலையில் மீன்கள் ஏலம் முறை தொடக்கம்

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் பல ஆண்டுகளாக இரவு மீன்கள் ஏலம் விடும்முறை தற்போது மாற்றப்பட்டு, காலையில் மீன்கள் ஏலம் விடும் முறை சனிக்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி விசைப்படகு மீனவா்க... மேலும் பார்க்க