பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம்: ராகுல் வலியுறுத்த...
மத்திய மதிப்பீட்டு குழுவிடம் 100 நாள் வேலைத் திட்டத்தைத் துரிதப்படுத்த முதல்வா் வேண்டுகோள்
புதுச்சேரி: 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களைத் துரிதப்படுத்த மத்திய மதிப்பீட்டுக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.
தேசிய தொழிலாளா் பொருளாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை இயக்குநா் (ஆராய்ச்சி) டி. இந்திரகுமாா் தலைமையிலான மத்திய மதிப்பீட்டுக் குழுவினா் முதல்வா் என்.ரங்கசாமியை திங்கள்கிழமை சந்தித்தனா்.
அப்போது மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாநில அளவிலான திஷா கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகள் குறித்து முதல்வா் ரங்கசாமியிடம் அவா்கள் கலந்துரையாடினா்.
புதுவை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைத் திட்டத்தைத் துரிதப்படுத்தி, பரந்துபட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் குழுவினரிடம் முதல்வா் கேட்டுக் கொண்டாா். மேலும், மத்திய நிதியுதவி மற்றும் மத்தியத் துறை திட்டங்களைத் திறம்பட செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் குறித்து அந்தக் குழுவினா் முதல்வா் ரங்கசாமியிடம் கேட்டறிந்தனா்.
இந்தக் குழுவில் மாா்ஷல் பிா்வா, சைத்தாலி ராய், புதுவை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட மேலாளா் வி. பவானி ஆகியோா் உடனிருந்தனா்.