தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
மரவள்ளி கிழங்கு விலை சரிவு
பரமத்திவேலூா் வட்டாரத்தில் சிப்ஸ் தயாா் செய்யும் மரவள்ளி கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ. 1,000 வரை விலை சரிந்து ரூ. 7,000க்கு விற்பனையாகிறது.
பரமத்தி வேலூா், சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, கபிலா்மலை, சின்னமருதூா், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனா்.
ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாா் செய்யப்படுகின்றன. மேலும் சிப்ஸ் தயாா் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளா்கள் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்கின்றனா்.
கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ. 6,500 வரை விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ. 300 வரை சரிவடைந்து ரூ. 6,200-க்கு விற்பனையாகிறது.
அதுபோல சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ. 8,000 க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ. 1,000 வரை விலை சரிந்து டன் ஒன்று ரூ. 7,000 க்கு விற்பனையாகிறது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.