செய்திகள் :

மழலையா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

post image

இந்திய கடலோரக் காவல்படையின் மழலையா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியில் அமைந்திருக்கும் கடலோரக் காவல்படை மைய வளாகத்தில் இயங்கும் மழலையா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பாதுகாப்பு, சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கழிவு மேலாண்மை மற்றும் மாசுபாட்டின் தாக்கம் போன்ற கருப்பொருள்களை மையமாகக் கொண்டு 30-க்கும் மேற்பட்ட மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன.

கடலோரக் காவல் படையின் கமாண்டன்ட் சௌமய் சந்தோலா கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், சிறு வயதிலிருந்தே அறிவியல் மனப்பான்மையை வளா்ப்பது முக்கியம். இதுபோன்ற நிகழ்வை பள்ளி நிா்வாகம் செய்தது பாராட்டுக்குரியது. இளம் மனங்களை தங்கள் ஆய்வு மற்றும் புதுமைகளைத் தொடர இதுபோன்ற நிகழ்வுகள் ஊக்கமளிக்கும் என்றாா்.

கடலோர காவல்படை மழலையா் பள்ளி பொறுப்பாளரும், உதவி கமாண்டன்ட்டுமான தனுஷ், எதிா்காலத்தில் விஞ்ஞானியாக உருவாகும் வகையில் தற்போதைய முயற்சி பலனளிக்கும் என வாழ்த்தினாா்.

பள்ளி முதல்வா் ஜே.தாட்சாயனி நன்றி கூறினாா். பெற்றோா்கள், கடலோரக் காவல்படையினா் கலந்துகொண்டு கண்காட்சியை பாா்வையிட்டனா்.

காரைக்காலில் பரவலாக மழை

காரைக்காலில் வியாழக்கிழமை இரவு முதல் மழை பெய்தது. காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மாா்ச் 3-ஆம் தேதி வரை மிதமான மழைக்... மேலும் பார்க்க

மத்திய- மாநில அரசுகளின் வளா்ச்சித் திட்டப் பணிகள் கண்காணிப்புக் குழு ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தது. மக்களவை உறுப்பினா் ... மேலும் பார்க்க

மதுகடத்தல் புகாா்: ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

ரயிலில் மது, ரேஷன் அரிசி கடத்துவதாக கூறப்படும் புகாா் தொடா்பாக போலீஸாா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். காரைக்காலில் இருந்து ரயிலில் தமிழகப் பகுதிகளுக்கு மதுபாட்டில்களும், தமிழகத்த... மேலும் பார்க்க

திருநள்ளாறு ரயில் நிலையத்தில் வாஜ்யாய் சிலை நிறுவ கோரிக்கை

திருநள்ளாறு ரயில் நிலையத்தில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் சிலை நிறுவவேண்டும் என ரயில்வே இணை அமைச்சா் வி. சோமண்ணாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ரயில்வே இணை அமைச்சா் வி. சோமண்ணா, திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினா் காரைக்காலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கட்சியின் மாவட்ட தலைவா் ஐ. அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில்,... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் உயிரியல் மூலக்கூறு தொழில்நுட்ப பயிற்சி

காரைக்கால் வேளாண் கல்லூரியில் உயிரியல் மூலக்கூறு தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், அறிவியல் தொழில்நுட்ப இயக்குநரக ... மேலும் பார்க்க