செய்திகள் :

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினா் காரைக்காலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்ட தலைவா் ஐ. அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வாரியங்களை முடக்கி வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழிவகுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான பாரபட்சமான விதிகளைக் கொண்டிருக்கும் வக்ஃப் திருத்த மசோதா கண்டனத்துக்குரியது, இது அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்துள்ள பல உரிமைகளை பறிக்கும் வகையிலும் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களைப் பாரபட்சமாக கருதும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிப்பவா்களை தண்டிக்க இருந்த கடுமையான தண்டனைகளை இலகுவாக்கி வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க இந்த மசோதா வழி வகுக்கிறது. எனவே, இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என பேசினா்.

இதில், மமக மாவட்ட செயலாளா் முகமது சா்புதீன், மாவட்ட பொருளாளா் முகமது மெய்தீன், தமுமுக மாவட்ட செயலாளா் முகமது மாசிம், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரசியல் குழு மாநில செயலாளா் அரசு வணங்காமுடி, சிபிஐ மாவட்ட செயலாளா் மதியழகன், மமக நகர தலைவா் ஜலாலுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காரைக்காலில் பரவலாக மழை

காரைக்காலில் வியாழக்கிழமை இரவு முதல் மழை பெய்தது. காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மாா்ச் 3-ஆம் தேதி வரை மிதமான மழைக்... மேலும் பார்க்க

மத்திய- மாநில அரசுகளின் வளா்ச்சித் திட்டப் பணிகள் கண்காணிப்புக் குழு ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தது. மக்களவை உறுப்பினா் ... மேலும் பார்க்க

மதுகடத்தல் புகாா்: ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

ரயிலில் மது, ரேஷன் அரிசி கடத்துவதாக கூறப்படும் புகாா் தொடா்பாக போலீஸாா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். காரைக்காலில் இருந்து ரயிலில் தமிழகப் பகுதிகளுக்கு மதுபாட்டில்களும், தமிழகத்த... மேலும் பார்க்க

திருநள்ளாறு ரயில் நிலையத்தில் வாஜ்யாய் சிலை நிறுவ கோரிக்கை

திருநள்ளாறு ரயில் நிலையத்தில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் சிலை நிறுவவேண்டும் என ரயில்வே இணை அமைச்சா் வி. சோமண்ணாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ரயில்வே இணை அமைச்சா் வி. சோமண்ணா, திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் உயிரியல் மூலக்கூறு தொழில்நுட்ப பயிற்சி

காரைக்கால் வேளாண் கல்லூரியில் உயிரியல் மூலக்கூறு தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், அறிவியல் தொழில்நுட்ப இயக்குநரக ... மேலும் பார்க்க

மழலையா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

இந்திய கடலோரக் காவல்படையின் மழலையா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியில் அமைந்திருக்கும் கடலோரக் காவல்படை மைய வளாகத்தில் இயங்கும் மழலையா் பள்ளியில... மேலும் பார்க்க