செய்திகள் :

வேலைவாய்ப்பின்மை அரசுக்கு பெரிய சவால்: உ.பி. அரசு

post image

உத்தரப் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதாக அம்மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை குறித்து அம்மாநில சட்டப்பேரவையில் சமாஜவாதி கட்சி கேள்வி எழுப்பியது. இதனையடுத்து, மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் அனில் ராஜ்பர் பதிலளித்ததாவது, ``லக்னௌவில் நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் 28,333 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ரூ. 37.33 லட்சம் கோடி முதலீட்டு முன்மொழிவுகள் பெறப்பட்டு, ரூ. 6 லட்சம் கோடி முதலீட்டு முன்மொழிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறும். நாட்டில் திறமையான இளைஞர்களைக் கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது.

வேலைவாய்ப்பின்மை மாநில அரசுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தாலும், அதற்கேற்றவாறு மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2017 முதல் இதுவரையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மாநில அரசு பல்வேறான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிக்க:ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, தமிழைக் காப்பேன்: முதல்வர்

தற்போது, தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.2 சதவிகிதமாக இருந்தாலும், உத்தரப் பிரதேசத்தில் 3 சதவிகிதம் என்ற நிலையிலேயே உள்ளது. சமாஜவாதியின் ஐந்தாண்டு ஆட்சியில் 1.40 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கியது; ஆனால், பாஜக தலைமையிலான 7.50 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி, நமது திறமையான தொழிலாளர்களின் திறனை பல்வேறு நாடுகளும் அங்கீகரித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து பணியாற்றி வருகிறது. இதுவரையில் 5,600 திறமையான தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு உத்தரப் பிரதேசம் அனுப்பியுள்ளது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடமிருந்து எந்த புகாரும் இல்லை. மேலும் குரோசியா, ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனுப்பப்பட உள்ளனர்.

பல்வேறு நாடுகளில் பணிபுரியும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், கோடிக்கணக்கான பணத்தை அனுப்புவதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பங்களித்து வருகின்றனர். இதனிடையே, 5000 தொழிலாளர்களைக் கொண்ட மற்றொரு குழுவையும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது’’ என்று கூறினார்.

ஆந்திராவில் போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் அபராதம், சிறை!

ஹைதராபாத்: இன்று முதல் ஆந்திர அரசு போக்குவரத்து விதிகளை கடுமையாக்கியுள்ளது. விருப்பப்படி விதிகளை மீறியதற்காக வாகன ஓட்டிகளை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச் சரிவு: மேலும் 14 பேர் மீட்பு! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில் 55 பேர் சிக்கிய நிலையில், 47 பேரை இந்திய ராணுவம் மீட்டுள்ளது. மீதமுள்ள 8 பேரை 4 ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.உத்தரகண்டில் இந்திய-தி... மேலும் பார்க்க

தில்லி தனியார் வங்கியில் தீ விபத்து!

தில்லியின் தர்யாகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கோல்சா சினிமாவுக்கு எதிரே உள்ள ஆக்சிஸ் வங்கியில் இன்று காலை 9:25 மண... மேலும் பார்க்க

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். தில்லியில் 'வைகை', 'பொதிகை' என்ற பெயரில் தமிழ்நாடு இல்லம் உள்ளது. இந்நிலையில் ... மேலும் பார்க்க

பஞ்சாப்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தில் ஐவர் பலி

டார்ன் டாரன்: பஞ்சாப் மாநிலம் டார்ன் டாரன் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர்.பன்டோரி கோலா என... மேலும் பார்க்க

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித... மேலும் பார்க்க